INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, October 6, 2021

YAVANIKA SRIRAM

 A POEM BY

YAVANIKA SRIRAM


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Too bad I remained totally unaware; extremely sorry.
(Pause; build up)
Somehow the cuffs had clasped round the legs
The travelers return home
Vagabonds blabber
He who postponed time
would turn the Place into a memory-lapse
Dreams never have the prospect of coming true
Moreover it has no beginning nor end.
When I come to know of startling news
I stand lost and blinking.
Can entrust just this much _
to the fruit left on earth by the tree
to be as suits its whims and fancies
to the waves to roar ever and again
for going without word equivalent
Further the wearisome kinship with the too long a role
being played by god in the chain of life – that also.
Searching for those who declare their love for us
becomes
an all-time struggle.
Sea is but a pond filled with rain water
It is not some kind of riot like taking water for our field
from a pool
The scale sufficient to scorn Birth .
Siddhartha is escaping; fleeing.
Silly Fool.
Yavanika Sriram
அறியாமல் இருந்துவிட்டேன் மன்னிக்கவும்
(பீடிகை)
கால்களை எப்படியோ விலங்குகள் பூட்டிக்கொண்டு விட்டன
பயணிகள் இல்லம் திரும்பி விடுகிறார்கள்
நாடோடிகள் பிதற்றுகிறார்கள்
காலத்தை ஒத்தி வைத்தவர்
இடத்தை ஞாபகப்பிசகாக்குவார்
கனவுகளுக்கு எக்காலத்திலும் நடைமுறைச்சாத்தியமில்லை
மற்றும் அதற்கு ஆதியும் அந்தமும் இல்லை
.
திடுக்கிட்டுப்போகும்படியான செய்திகளை அறியும் போது அலங்கமலங்க விழிக்கிறேன்
இவ்வளவிற்குத்தான் ஒப்புக்கொடுக்க முடியும்
தோன்றியதைச் செய்யும்படிக்கு
ஒரு மரம் பூமியில் கைவிடும் கனிக்கு
அந்த அலைகள் திரும்பத்திரும்பஆர்ப்பரிப்பதற்கு
அதற்கு இணையான சொல்லற்றும் போவதற்கு
மேலும் உயிர்ப்பின்னலில் கடவுளின் நீண்டகாலப் பங்கின் மீது சோம்பலுறவும்தான்
நேசிக்கிறேன் என்பவர்களைத் தேடுவது ஒருவருக்கு
வாழ்நாள்ப்பிரயத்தனமாகிவிடுகிறது
கடல் என்பது மழைநீரால் நிரம்பிய ஒரு குட்டை
ஒரு குட்டையில் இருந்து நம் வயலுக்கு நீர் எடுப்பது போன்ற கலவரம் அல்ல அது
பிறவியை உதாசீனப்படுத்த போதுமான அளவுகோல்
தப்பிப் போய்க்கொண்டிருக்கிறான் சித்தார்த்தன்
முட்டாள்.

-------------------------------------------------------------------------------

மொழிபெயர்ப்பின் விசித்திரத்தன்மை

 கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் கவிதையொன்றை என்னால் முடிந்த அளவு மொழிபெயர்த்துப் பதிவேற்றியுள்ளேன். இன்னும் திருத்தங்கள் தேவைப்படும். அது குறித்து கமெண்ட் பகுதியில் எங்களுக்கிடையே நடந்த நட்பு ரீதியான உரையாடல் இது: லதா ராமகிருஷ்ணன்

Yavanika Sriram :Anaamikaa Rishi கவிதைக்கும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பிற்கும் அம்மொழி பெயர்ப்பை மீண்டும் தமிழில் கன்வர்ட் செய்யும்போது உண்டாகும் விசித்திரதன்மைக் கும் இடையே (அது வேறு என்னவோ செய்கிறது) மூன்று காலங்கள் உண்டாகிவிடுவது போல் இருக்கிறது. பிடித்தும் இருக்கிறது. அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று அறிய ஆவல்.

Anaamikaa Rishi : மூல கவிதைக்கு மிக நெருக்கமான மொழி பெயர்ப்புக்கு மிக முக்கியத் தேவை ஒரு தெளிவான வாசகப் பிரதி கிடைத்தல். ஒரு வாசகராக உங்கள் கவிதையில் அது எனக்குக் கிடைத்ததாகச் சொல்லவியலாது. என் போதாமையே இதற்குக் காரணம்.

அதற்காக முற்றும் புரியக் கூடிய நேரிடையான கவிதை களைத்தான் மொழி பெயர்ப்பது என்ற நிலைப்பாடு சரியல்ல. சில வார்த்தைகளின் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் கவிதையில் பொருந்தி வருவதாகத் தோன்றும் போது மொழிபெயர்ப்பதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. (உதார ணம்: பீடிகை)

நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள், எதைப் பற்றி எழுதினீர்கள், இந்த வார்த்தையை எந்த அர்த்தத் தில் பயன்படுத்தினீர்கள் என்றெல் லாம் கவிஞரிடம் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டு மொழி பெயர்த்தால் மொழி பெயர்ப்பு இன்னும் நேர்த்தியாக அமையக் கூடும். ஆனால்,அது கவிஞரிடம் நிகழ்த்தப்படும் அத்துமீறலாகி விடக்கூடுமோ என்ற தயக்கமும், ஒரு கவிதைக்கு எழுத்தாளர் பிரதி ஒன்றும் (ஒன்று தான் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா) ஒன்றுக்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளும் உண்டுஎன்ற நவீன தமிழ்க்கவிதைப் போக்கில் பெற்ற பார்வையின் காரணமாக கவிஞரிடம் அர்த்தத்தைக் கேட்பதில் உள்ள ஒவ்வாமையுணர்வும் சேர்ந்து எனக்குக் கிடைக்கும் அர்த்தத்தில் மொழிபெயர்க்கிறேன்.

பல சமயங்களில் பூடகக் கவிதை பகுதியளவே அர்த்த மாகி ஆனாலும் அதில் உணரக்கிடைக்கும் ஒரு ஆழம் அதை மொழிபெயர்க்கத் தூண்டு கிறது. மேலும் மூலமொழிக்கும் இலக்குமொழிக்கும் உள்ள தனித்து வமான வாக்கிய அமைப்புகளும் விரிபொருள்களும்கூட மூல கவிதை யின் மொழிபெயர்ப்பில் நெருட லாக அமையலாம்.

நீங்கள் விரும்பினால் உங்களுடைய இந்தக் கவிதையில் நீங்கள் சொல் லியிருப்பதை சொல்ல முற்படுவதை குறிப்புணர்த்தலாக கமெண்ட் பகுதியிலோ உள்பெட்டியிலோ தெரிவிக்கலாம். அதன் மூலம் என் மொழி பெயர்ப்பின் முதல் வரைவில் செய்யும் திருத்தங்களையும் இங்கே வெளியிடலாம்.

எப்படியுமே, மூலமொழிப் பிரதியை இலக்குமொழியில் பெயர்த்த பின் அதை மீண்டும் மூலமொழியில் செய்தால் அது ஒருவித விசித்திரத் தன்மையோடுதான் இருக்கும். இது உரைநடைக்கும் பொருந்தும்! ஆனா லும், இந்த வாதத்தை சரியில்லாத மொழிபெயர்ப் புக்கு சாதகமாக்கி விடலாகாது!

லதா ராமகிருஷ்ணன்.


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE