INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, August 31, 2026

INSIGHT - JULY 2026

 


S.SHANMUGAM

  A POEM BY 

S.SHANMUGAM


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)




He who crossed the road

having a small towel on his head

tore off thoroughly 

one of those posters 

torn and hanging in the sidewall.


Again looking at the wall

He attempted to laugh heartily

But at once suppressed it

Approaching him I asked

Why he drew back from having 

a full-throated laugh.

.

From inside the poster all and sundry

Talk to me without my permission.

None of it is meant for me.

How to stop this atrocity

Asked he.


I go past them without seeing them

my head turned the other side

Said I


Sir,  there is no place for me to look

What for the towel on the head – 

For Kaththiri heat

Oh – no,  this is also for avoiding posters


If  you can, please  remove these posters 

When there is no one around.

Here – have it ‘ 


Saying, he gave me a handkerchief to cover the head

Again he crossed the road  and reached across

Could it be that he had no mobile phone …….

தலையில் சிறிய துண்டை போட்டவாறு  

சலையை கடந்து சென்றவர் 

பக்கவாட்டு சுவரில் கிழிந்து தொங்கும் 

சுவரொட்டிகளில் ஒன்றை  

முழுவதுமாக அகற்றி எறிந்தார் 


மீண்டும் சுவரை பார்த்து 

உரக்க சிரிக்க எத்தனித்துவிட்டு

சட்டென்று அடக்கிக் கொண்டார் 

அவரை அணுகி கேட்டேன் 

சிரிப்பிலிருந்து பின்வாங்கியது ஏனென்று?


சுவரொட்டிக்குள்ளிருந்து யார் யாரோ 

தலையில் சிறிய துண்டை போட்டவாறு  

சாலையை கடந்து சென்றவர் 

பக்கவாட்டு சுவரில் கிழிந்து தொங்கும் 

சுவரொட்டிகளில் ஒன்றை  

முழுவதுமாக அகற்றி எறிந்தார் 


என் அனுமதியின்றியே 

என்னிடம் பேசுகிறார்கள் 

அதிலொன்றுகூட எனக்குரியது அல்ல 

எப்படி அதை நிறுத்துவது என்றார்


அவைகளை பார்க்காமல் வேறுபக்கம் 

திரும்பியபடி கடப்பது என் வழக்கம் என்றதும்

சார் பார்க்கக்கூட இடமில்லாமல் போனது எனக்கு

 தலையில் துண்டு கத்தரி வெம்மைக்கா

 அவரோ இல்லை 

அதுவும் சுவரொட்டிகளை தவிர்க்கத்தான் 

 

உங்களால் முடிந்தால் சுவரொட்டிகளை 

ஆள் நடமாட்டம் இல்லாத போது அகற்றுங்கள்

இந்தாருங்கள் என ஒரு கைக்குட்டையை 

தலைமீது போட்டுக் கொள்ள தந்தார்

மீண்டும் எதிர்ப்பக்கமாக சாலையை கடந்தார்

ஒருவேளை அவரிடம் கைபேசியில்லையோ.

- எஸ். சண்முகம் -

ABDUL SATHAR

 A POEM BY 

ABDUL SATHAR


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


My heart is a closed cabin

Now and then sorrow comes and 

knock at the window.

Even if I don’t open

blending with the wind

it enters inside!


Shedding tears 

is not my weakness

It is rain

stagnated deep down

It is river

swelling; overflowing.


Inside me 

memories as old photographs

remain faded

When I feel them

pain shoots at the fingers.


Sorrow is similar to night.

Even in the dark ,

 Stars spark.


Though sorrow unsettles me 

to the core

Through consoling, counselling my own self

I  come out of it 

stronger than before

 ·

எனது மனம் 

ஒரு மூடிய அறை…

அவ்வப்போது சோகம் வந்து 

சன்னலை தட்டுகிறது. 

திறக்கவில்லை எனினும்

காற்றோடு கலந்து 

உள்ளே நுழைகிறது…!


அழுகை என்பது 

எனது பலவீனம் அல்ல..

மனதின் ஆழத்தில் 

தேங்கி நிற்கும் மழை 

வழிந்து ஓடும் நதி…!

என்னுள் நினைவுகள்   

பழைய நிழற்படங்கள் போல்

பொலிவிழந்துள்ளன.. 

தொட்டுப் பார்க்கையிலே

விரல்களில் வலி 

ஒட்டிக்கொள்கிறது…!


துயரம் 

இரவு போன்றது…

இரவின் இருளிலும் 

விண்மீன்கள் 

ஒளிர்கின்றன..!


சோகம் என்னை

நிலைகுலைத்தாலும்

என்னை நானே

ஆற்றுப்படுத்தி

மீண்டெழுகிறேன்…!


-கோவை.அப்துல் சத்தார்

MULLAI AMUTHAN

A POEM BY 

MULLAI AMUTHAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



There was the dream.

The sparrow reared

would often come near the window

and remind of Life.


That the house we lived

Changing hands many

Is coming for sale

My elder sister said.


It can be given to our daughter

Wife insisted.

Indeed true.


The house Father purchased for Mother

For me too when married

it was there my first night was


Children growing

Going to sister as ‘Seedhanam’

Thus changing hands

Again and again….


In his last days

Lifting father in my hands

Carrying Mother to

crematorium

Everything remains in my memory

Crystal clear and secure


 I shouldn’t step inside the house

Law said.


Case filed against me

By my sister is still pending


Dreams aplenty

About the house lived long


Tomorrow from here

 My son would carry me also


Till that time

Let me live with dreams about that abode

I told the sparrow.


கனவு இருந்தது.

அடிக்கடி வளர்த்த குருவி

ஜன்னலருகில் வந்து

வாழ்வை நினைவூட்டும்.


நாம் வாழ்ந்த வீடு

கைமாறிக் கைமாறி

விற்பனைக்கு வருவதாக

அக்காள் சொன்னாள்.


மகளுக்கு கொடுக்கலாமே

மனைவி நச்சரித்தாள்.

உண்மைதான்.


அம்மாவிற்காக

அப்பா வாங்கிய வீடு.

திருமணமாகிய எனக்கும்

முதலிரவாக அமைந்த வீடு..


குழந்தகள் வளர்..

அக்காவிடம் சீதனமாய்ப் போய்…

கைமாறிக் கைமாறி…


கடைசிக்காலத்தில் அப்பாவை

கையில் தூக்கி

எடுத்துச் சென்றது முதல்..

அம்மாவை இடுகாடு

எடுத்துச் சென்றது வரை..

நினைவில் இருக்கிறது பத்திரமாய்.


வீட்டிற்குள்

வீட்டிற்குள்

காலே வைக்கக்கூடாது

என சட்டமும் சொன்னது..


என் மீதான அக்காளின் வழக்கு

இன்னும் நிலுவையில் இருக்கிறது.


நிறையவே வாழ்ந்த வீட்டின்

கனவுகள் இன்னமும் இருக்கிறது..


நாளை இங்கிருந்து

என்னையும் என் மகன்

தூக்கிச் செல்லக்கூடும்..


அதுவரை—

அந்த வீட்டின் கனவுகளுடன்

வாழ்ந்துகொள்கிறேனே..

குருவியிடம் சொன்னேன்..


JEYANTHAN JESUDOSS

 A POEM BY 

JEYANTHAN JESUDOSS

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


I DON’T SIT FOR WRITING POEM

With its words 

ever changing 

in shape and structure

It searches for me day in and day out.


Getting into the dreams of he who remains

In blissful communion with prose, essays

It invites.


After I wake up with my sleep gone

I will surely write about thee, said I.


More than writing

You better get a divine vision of me

in the morning prayer with eyes closed,

it said.


After work 

with the spine aching abominably

I dozed off in Metro.


When I woke up

right in front of me stood teary-eyed

She who had gone away 

as dream unrealized.


While taking leave 

It was not her tears that

fell scattering

It was Poem stamped upon

 by fellow-passengers.

கவிதையை நான் எழுத அமர்வதில்லை

அது தன் உருமாறும் சொற்களோடு 

அன்றாடம் என்னைத் தேடுகிறது.


கட்டுரைகளில் சல்லாபித்துக் கிடப்பவனின்

கனவுகளில் நுழைந்து அழைக்கிறது.


நித்திரை கலைந்து எழுந்தபின் 

நிச்சயம் எழுதுவேன் உன்னை என்றேன்.


எழுதுவதை விட 

என்னை தரிசி என்றது

கண் மூடிய காலைப் பிரார்த்தனையில்.


பணி முடிந்து முதுகொடிந்து 

மெட்ரோவில் கண் அயர்ந்தேன்.


கண் விழித்தபோது 

நீர் பெருக்கி நின்றிருந்தாள்

நீள் கனவாய் போனவள்.


விடைபெறும்போது 

விழுந்து சிதறியது

அவளின் கண்ணீர் அல்ல

சக பயணிகளின் காலில் மிதிப்பட்ட

கவிதை .

- நோவா நதி

VALANGAIMAN NOORDEEN

 A POEM BY 

VALANGAIMAN NOORDEEN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


I DISAPPEAR IN THE PAINTING

Outside my window a bird

Is flying towards the dark

Does it want to obtain darkness

Or is it escaping from light…?


The ash-hued sky with its clouds

Is fanning the face of this day’s end

Faraway trees turning into black letters

And stand there as poem beyond reading


The branches that bore the birds’ voices during day

Now hold the burden of nothingness

The evening stuck in the window-bars

Peel its skin gradually and become Night


The wind entering my room

Turning into dark’s  perfume 

spreads its fragrance.

Darkness settled in the bird’s feathers

Alight inside me also little by little


I sit closing the window


Bird, sky, clouds, darkness,

All draw my aloneness.

In that sketch just as this dusk

I am extinguishing.


ஓவியத்தில் மறைகிறேன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  

என் ஜன்னலுக்கு வெளியே ஒரு பறவை

இருளை நோக்கிப் பறந்துக் கொண்டிருக்கிறது.

அது இரவை அடைய விரும்புகிறதா,

அல்லது வெளிச்சத்திலிருந்து தப்பிக்கிறதா…?


சாம்பல் நிற வானம் தன் மேகங்களால்

இந்த நாளின் இறுதியின் முகத்தில் சாமரம் வீசுகிறது.

தொலைதூர மரங்கள் கருநிற எழுத்துக்களாகி

வாசிக்க முடியாத கவிதையாக நிற்கின்றன.


பகலில் பறவைகளின் குரல்களைத் தாங்கிய கிளைகள்

இப்போது வெறுமையின் எடையைத் தாங்குகின்றன.

ஜன்னல் கம்பிகளில் சிக்கியிருக்கும் மாலை

மெல்ல மெல்ல தன் உடலை உரித்து இரவாகிறது.


என் அறைக்குள் நுழையும் காற்று

கருமையின் வாசனையாகி கமழ்கிறது.

பறவையின் சிறகுகளில் படிந்த இருள்

எனக்குள்ளும் சிறிது சிறிதாக இறங்குகிறது.


ஜன்னலை மூடி அமர்கிறேன்.


பறவை, வானம், மேகங்கள், இருள்

அனைத்தும் என் தனிமையை வரைகின்றன.

அந்த ஓவியத்தில் இந்த மாலையைப்போலவே

அணைந்துக்கொண்டிருக்கிறேன் நான்.

-வலங்கைமான் நூர்தீன்

THEEPIKA THEEPA


 A POEM BY 

THEEPIKA THEEPA 

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


  ANANDHAN 

ALSO HAD A LIFE



There was a life for Anandhan also

Who used to be with tyre and stick

coming to the roadside shop


inside the laughing eyes of he 

wearing pin-attached half-pants 

and with cat-fur back

there was the pride of a car.


He who would buy sugar for five rupees 

and silk -egg sambol for half-a-rupee

buying a kadabu sweet for the remaining 10 paise

and concealing it inside jaw

would go flying


Catching dragonflies and make them fly 

with thread tied

Catching crow and tying soda-lid 

make them fly

What would his days spent thus

do for hunger

they stealthily stoned the green mangoes


His mother plucking grass and

Reaching home late with twenty rupees

Chasing away the sleeping cat

and lighting the stove

would provide him hot lunch.


Neither he who went barefoot

and studied in Maha Vidhyalaya

Nor his family

had any dream about education.


Hunger


Hovering around hunger they crept and

spread

Those children

growing under the hot sun

God kept them away from dire ailments

not being vengeful towards the little ones


For the father who covered with sacks

 his children

lying huddled all too close

in the tiny hutment

throughout the night

blisters and boils of 

the next day’s hunger.


Even today Anandhan’s home 

remains the same

with no Anandhan. 



Deepika

ஆனந்தனுக்கும் ஒரு வாழ்விருந்தது

------------------‌‌----------------------------------------

ரயறும்,  தடியுமாக

பெட்டிக் கடைக்கு வருகிற

ஆனந்தனுக்கும் ஒரு வாழ்விருந்தது. 


ஊசி குத்திய காற்சட்டையும், 

பூனை மயிர் முதுகுமாய் சிரிக்கிறவனின்

கண்களுக்குள்

ஒரு காரின் பெருமிதமிருந்தது.


ஐஞ்சு ரூபாய்க்கு சீனிச் சரையும்

ஐம்பது சதத்துக்கு

சில்க் முட்டைச் சம்போவும்

வாங்கிக் கொண்டு போகிறவன்,

மிச்சப் பத்துச் சதத்துக்கு

ஒரு கடாபி இனிப்பு வாங்கி

கொடுப்புக்குள் புதைத்துக் கொண்டு

பறந்து போவான்.


தும்பிகளைப் பிடித்து நூல் கட்டிவிடுவதும்,

காகத்தைப் பிடித்து

சோடாமூடி கட்டி விடுவதுமாய் கழிந்த

அவன் பகல்கள்

பசிக்கு என்ன செய்யும்?

கள்ள மாங்காய்களுக்கு கல்லெறிந்தன.


புல்லுப் பிடுங்கி விட்டு,

இருபது ரூபாவோடு

பின்னேரம் வீட்டுக்குப் போகிற

அவனின் தாய் தான்,

பூனை கலைத்து அடுப்பு மூட்டி

கொதிசோறு கொடுப்பாள்.


வெறுங்காலோடு போய்

மகா வித்தியாலத்தில்

படித்து விட்டு வந்தவனிடமும் சரி,

குடும்பத்திடமும் சரி

கல்வி பற்றி

எந்தக் கனவுமே இருந்ததில்லை.


பசி.


பசியை சுற்றிக் கொண்டு தான்

அவர்கள் படர்ந்து கிடந்தார்கள்.


குஞ்சும்,  குறுணியுமாய்

வெயிலுக்குள் வளர்ந்த பிள்ளைகளுக்கு

நோயென்று பெரிதாய்

வஞ்சம் வைத்ததில்லை தெய்வம்.


பொட்டுக் குடிசைக்குள்

ஒட்டிக் கொண்டு தூங்குகிற

தன் குழந்தைகளுக்கு

சாக்கைப் போர்த்தி விடுகிற 

நாட்கூலித் தகப்பனுக்கு

இரவெல்லாம்

நாளைய பசியின் கொப்பளங்கள். 


இன்றைக்கும் 

அப்படியே தானிருக்கிறது 

ஆனந்தனில்லாத ஆனந்தன் வீடு. 

------ xxx -------

தீபிகா 

SRINESAN

A POEM BY 
SRINESAN
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE CRADLE OF GODDESS

A Family comprising 
Mother, Father and Child
was killed by the Goddess
by carrying out an accident.
As the Mother was a good soul
The goddess sent her to the paradise 
on the right side
Calling the Father a cruel fellow
She pushed him into hell 
on the left side.
Not knowing whether it was good or bad
She kept the child with herself.
The child that began to cry
craving for its parents
continued to weep non-stop.
oud into cloth and lighting a rope
twining them both
the goddess tying a cradle in the space
placed the child in it and started swinging it.
The cradle oscillated between
Heaven and Hell.
The child that started seeing Mother 
on the right side
and Father on the left side
stopped crying.
The goddess heaved a sigh of relief.
But the child began to sob again
Poor thing - The Goddess
completely forgetting 
whether to turn the child good
or bad
started swinging the cradle
and she is swinging it ever.






MARIMUTHU SIVAKUMAR

A POEM BY 

MARIMUTHU SIVAKUMAR

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

ALIENS




The other world convened an emergency meeting

It invited one from my world too

As that one I attended

The other world condemned 

this world’s vicious culture of weaponry

Witnessing the fraudulent  trips 

of this world that has resources 

in abundance

the leaders of the alien world

criticised caustically

The clownish leaders of the world

not having the capacity to protect the globe

contemplating on  shifting man to Mars

should be severely punished

they swore

For catching hold of those leaders 

Not having the skill and will to save the world

And to throw them in fire

In the alien world

They sent me again to this world

I was changed into 

millions of sun-rays

For crushing the demons of weapons

that dominate the world

proving dreadful

I turned into an armament

Marimuthu Sivakumar


வேற்றுலக மனிதர்கள்.

வேற்றுலகம் அவசர சந்திப்பொன்றிக்காக கூடியது.

எம் உலகத்திலிருந்தும் ஒருவரை அழைத்திருந்தது.

அவ்வொருவனாக நான் சென்றிருந்தேன்..

உலகத்தின் ஆயுத கலாசார வன்மத்தை வேற்றுலகம் கண்டித்தது.

அத்தனை வளங்களை கொண்ட உலகத்தின் நேர்மையில்லா பயணங்களை கண்டு மிக கடுமையாக வேற்றுலக தலைவர்கள் விமர்சித்தனர்.

உலகை காக்கும் திறனை இழந்து

செவ்வாயில் மனிதனை குடியேற்ற நகரும் கோமாளித் தலைமைகள் தண்டிக்கப்பட வேண்டுமென சூளுரைத்தனர்...

உலகை காக்க திறமையற்ற தலைவர்களை பிடித்து வேற்றுலகத்துள் தீயிலிட என்னை மீண்டும் உலகிற்கு அனுப்பினர்...

பல்லாயிர சூரிய கதிர்களாக நான் மாற்றப்பட்டேன்...

உலகை ஆட்டிப்படைக்கும் ஆயுத பேய்களை நசுக்க ஆயுதமானேன்...

~~~~~

மாரிமுத்து சிவகுமார்

S.J.BABYAN

 A POEM BY 

S.J.BABYAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


Falling as seed

rising and spreading branches

there stood the Tree.


It thought of giving 

shade and fruits.


As birds came and sat

It reached the zenith of bliss.


Each  building nest in a branch

They so captured it!


The names of branches changed;

The tree’s name alone

None remembered.


The hand that shared the fruits

Remaining empty

Those who shared the nests

Leapt in joy reveling.


The darkness of roots

None has ever viewed.

The green of the fresh leaves alone

They acclaimed.

None cared about the roots 

embracing the soil.


Sitting in branches touching the sky

They would draw borders


Those who reposed in the shade

Forgot to write the history of Sun


Each leaf

Called its green

A separatee category.

But 

Juice is one and the same


Those who spoke close to your ears

When the wind blew

When storm arrived

Flew in search of their own sky


The roots that borne that land

They didn’t note even in the map.


In the end

The tree alone

Remained standing there in silence

For

It knows

The land can be captured

Fruits can be plucked


But the memories of roots 

entrenched deep down

none can encroach.


வித்தாக விழுந்து

எழுந்து கிளை பரப்பி

நின்றது மரம்.


நிழல் கொடுத்து

கனி கொடுக்க அது

நினைத்தது.


பட்சிகள் வந்தமர

ஆனந்தத்தின் எல்லைக்கே

சென்றது.


ஆளுக்கொரு கிளையில்

கூடமைத்து கையகப்படுத்தின

அவை!


கிளைகளின் பெயர்கள்

மாறின;

மரத்தின் பெயர் மட்டும்

யாருக்கும் நினைவில்லை.


கனிகளைப் பகிர்ந்த கை

காலியாகவே இருந்திட

கூடுகளைப் பகிர்ந்தவர்கள்

குதித்து குதூகளித்தனர்.


வேர்களின் இருளை

யாரும் இதுவரை பார்த்ததில்லை.

பச்சிலைகளின் பசுமையை

மட்டும் கொண்டாடினர்.

மண்ணை அணைத்திருந்த

வேர்களைப் பற்றி 

யாரும் பேசுவதில்லை.


வானம் தொட்ட

கிளைகளில் அமர்ந்து

எல்லைகளை வரைவர்.


நிழலில் ஓய்ந்தவர்கள்

வெயிலின் வரலாற்றை

எழுத மறந்தனர்.


ஒவ்வொரு இலையும்

தன் பச்சையை

தனிச்சாதி என்றது.


ஆனால்

சாறு ஒன்றுதான்.

காற்று வந்தபோது

காதோரம் பேசியவர்கள்,

புயல் வந்ததும்

தனக்கான

வானத்தைத் தேடிப் பறந்தனர்.


அந்த நிலத்தை

தாங்கிய வேர்களை

வரைபடத்தில் கூட

குறிக்கவில்லை.

இறுதியில்,

மரம் மட்டும்

மௌனமாக நின்றது.

ஏனெனில்

அதற்குத் தெரியும்.!

நிழலைக் கைப்பற்றலாம்.

கனியைப் பறித்துக் கொள்ளலாம்.

ஆனால்,

மண்ணின் ஆழத்தில்

பதிந்திருக்கும்

வேர்களின் நினைவை

யாராலும் ஆக்கிரமிக்க முடியாது.


செஜெ பபியான்

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY 2026