INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE
Monday, August 31, 2026
S.SHANMUGAM
A POEM BY
S.SHANMUGAM

He who crossed the road
having a small towel on his head
tore off thoroughly
one of those posters
torn and hanging in the sidewall.
Again looking at the wall
He attempted to laugh heartily
But at once suppressed it
Approaching him I asked
Why he drew back from having
a full-throated laugh.
.
From inside the poster all and sundry
Talk to me without my permission.
None of it is meant for me.
How to stop this atrocity
Asked he.
I go past them without seeing them
my head turned the other side
Said I
Sir, there is no place for me to look
What for the towel on the head –
For Kaththiri heat
Oh – no, this is also for avoiding posters
If you can, please remove these posters
When there is no one around.
Here – have it ‘
Saying, he gave me a handkerchief to cover the head
Again he crossed the road and reached across
Could it be that he had no mobile phone …….
தலையில் சிறிய துண்டை போட்டவாறு
சலையை கடந்து சென்றவர்
பக்கவாட்டு சுவரில் கிழிந்து தொங்கும்
சுவரொட்டிகளில் ஒன்றை
முழுவதுமாக அகற்றி எறிந்தார்
மீண்டும் சுவரை பார்த்து
உரக்க சிரிக்க எத்தனித்துவிட்டு
சட்டென்று அடக்கிக் கொண்டார்
அவரை அணுகி கேட்டேன்
சிரிப்பிலிருந்து பின்வாங்கியது ஏனென்று?
சுவரொட்டிக்குள்ளிருந்து யார் யாரோ
தலையில் சிறிய துண்டை போட்டவாறு
சாலையை கடந்து சென்றவர்
பக்கவாட்டு சுவரில் கிழிந்து தொங்கும்
சுவரொட்டிகளில் ஒன்றை
முழுவதுமாக அகற்றி எறிந்தார்
என் அனுமதியின்றியே
என்னிடம் பேசுகிறார்கள்
அதிலொன்றுகூட எனக்குரியது அல்ல
எப்படி அதை நிறுத்துவது என்றார்
அவைகளை பார்க்காமல் வேறுபக்கம்
திரும்பியபடி கடப்பது என் வழக்கம் என்றதும்
சார் பார்க்கக்கூட இடமில்லாமல் போனது எனக்கு
தலையில் துண்டு கத்தரி வெம்மைக்கா
அவரோ இல்லை
அதுவும் சுவரொட்டிகளை தவிர்க்கத்தான்
உங்களால் முடிந்தால் சுவரொட்டிகளை
ஆள் நடமாட்டம் இல்லாத போது அகற்றுங்கள்
இந்தாருங்கள் என ஒரு கைக்குட்டையை
தலைமீது போட்டுக் கொள்ள தந்தார்
மீண்டும் எதிர்ப்பக்கமாக சாலையை கடந்தார்
ஒருவேளை அவரிடம் கைபேசியில்லையோ.
- எஸ். சண்முகம் -
ABDUL SATHAR
A POEM BY
ABDUL SATHAR
Now and then sorrow comes and
knock at the window.
Even if I don’t open
blending with the wind
it enters inside!
Shedding tears
is not my weakness
It is rain
stagnated deep down
It is river
swelling; overflowing.
Inside me
memories as old photographs
remain faded
When I feel them
pain shoots at the fingers.
Sorrow is similar to night.
Even in the dark ,
Stars spark.
Though sorrow unsettles me
to the core
Through consoling, counselling my own self
I come out of it
stronger than before
·
எனது மனம்
ஒரு மூடிய அறை…
அவ்வப்போது சோகம் வந்து
சன்னலை தட்டுகிறது.
திறக்கவில்லை எனினும்
காற்றோடு கலந்து
உள்ளே நுழைகிறது…!
அழுகை என்பது
எனது பலவீனம் அல்ல..
மனதின் ஆழத்தில்
தேங்கி நிற்கும் மழை
வழிந்து ஓடும் நதி…!
என்னுள் நினைவுகள்
பழைய நிழற்படங்கள் போல்
பொலிவிழந்துள்ளன..
தொட்டுப் பார்க்கையிலே
விரல்களில் வலி
ஒட்டிக்கொள்கிறது…!
துயரம்
இரவு போன்றது…
இரவின் இருளிலும்
விண்மீன்கள்
ஒளிர்கின்றன..!
சோகம் என்னை
நிலைகுலைத்தாலும்
என்னை நானே
ஆற்றுப்படுத்தி
மீண்டெழுகிறேன்…!
-கோவை.அப்துல் சத்தார்
MULLAI AMUTHAN
A POEM BY
MULLAI AMUTHAN
Rendered in English by Latha Ramakrishnan(*First
Draft)
The sparrow reared
would often come near the window
and remind of Life.
That the house we lived
Changing hands many
Is coming for sale
My elder sister said.
It can be given to our daughter
Wife insisted.
Indeed true.
The house Father purchased for Mother
For me too when married
it was there my first night was
Children growing
Going to sister as ‘Seedhanam’
Thus changing hands
Again and again….
In his last days
Lifting father in my hands
Carrying Mother to
crematorium
Everything remains in my memory
Crystal clear and secure
I shouldn’t
step inside the house
Law said.
Case filed against me
By my sister is still pending
Dreams aplenty
About the house lived long
Tomorrow from here
My son would
carry me also
Till that time
Let me live with dreams about that abode
I told the sparrow.
கனவு இருந்தது.
அடிக்கடி வளர்த்த குருவி
ஜன்னலருகில் வந்து
வாழ்வை நினைவூட்டும்.
நாம் வாழ்ந்த வீடு
கைமாறிக் கைமாறி
விற்பனைக்கு வருவதாக
அக்காள் சொன்னாள்.
மகளுக்கு கொடுக்கலாமே
மனைவி நச்சரித்தாள்.
உண்மைதான்.
அம்மாவிற்காக
அப்பா வாங்கிய வீடு.
திருமணமாகிய எனக்கும்
முதலிரவாக அமைந்த வீடு..
குழந்தகள் வளர்..
அக்காவிடம் சீதனமாய்ப் போய்…
கைமாறிக் கைமாறி…
கடைசிக்காலத்தில் அப்பாவை
கையில் தூக்கி
எடுத்துச் சென்றது முதல்..
அம்மாவை இடுகாடு
எடுத்துச் சென்றது வரை..
நினைவில் இருக்கிறது பத்திரமாய்.
வீட்டிற்குள்
வீட்டிற்குள்
காலே வைக்கக்கூடாது
என சட்டமும் சொன்னது..
என் மீதான அக்காளின் வழக்கு
இன்னும் நிலுவையில் இருக்கிறது.
நிறையவே வாழ்ந்த வீட்டின்
கனவுகள் இன்னமும் இருக்கிறது..
நாளை இங்கிருந்து
என்னையும் என் மகன்
தூக்கிச் செல்லக்கூடும்..
அதுவரை—
அந்த வீட்டின் கனவுகளுடன்
வாழ்ந்துகொள்கிறேனே..
குருவியிடம் சொன்னேன்..
JEYANTHAN JESUDOSS
A POEM BY
JEYANTHAN JESUDOSS
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
I DON’T SIT FOR WRITING POEM
With its words
ever changing
in shape and structure
It searches for me day in and day out.
Getting into the dreams of he who remains
In blissful communion with prose, essays
It invites.
After I wake up with my sleep gone
I will surely write about thee, said I.
More than writing
You better get a divine vision of me
in the morning prayer with eyes closed,
it said.
After work
with the spine aching abominably
I dozed off in Metro.
When I woke up
right in front of me stood teary-eyed
She who had gone away
as dream unrealized.
While taking leave
It was not her tears that
fell scattering
It was Poem stamped upon
by fellow-passengers.
கவிதையை நான் எழுத அமர்வதில்லை
அது தன் உருமாறும் சொற்களோடு
அன்றாடம் என்னைத் தேடுகிறது.
கட்டுரைகளில் சல்லாபித்துக் கிடப்பவனின்
கனவுகளில் நுழைந்து அழைக்கிறது.
நித்திரை கலைந்து எழுந்தபின்
நிச்சயம் எழுதுவேன் உன்னை என்றேன்.
எழுதுவதை விட
என்னை தரிசி என்றது
கண் மூடிய காலைப் பிரார்த்தனையில்.
பணி முடிந்து முதுகொடிந்து
மெட்ரோவில் கண் அயர்ந்தேன்.
கண் விழித்தபோது
நீர் பெருக்கி நின்றிருந்தாள்
நீள் கனவாய் போனவள்.
விடைபெறும்போது
விழுந்து சிதறியது
அவளின் கண்ணீர் அல்ல
சக பயணிகளின் காலில் மிதிப்பட்ட
கவிதை .
- நோவா நதி
VALANGAIMAN NOORDEEN
A POEM BY
VALANGAIMAN NOORDEEN
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
I DISAPPEAR IN THE PAINTING
Outside my window a bird
Is flying towards the dark
Does it want to obtain darkness
Or is it escaping from light…?
The ash-hued sky with its clouds
Is fanning the face of this day’s end
Faraway trees turning into black letters
And stand there as poem beyond reading
The branches that bore the birds’ voices during day
Now hold the burden of nothingness
The evening stuck in the window-bars
Peel its skin gradually and become Night
The wind entering my room
Turning into dark’s perfume
spreads its fragrance.
Darkness settled in the bird’s feathers
Alight inside me also little by little
I sit closing the window
Bird, sky, clouds, darkness,
All draw my aloneness.
In that sketch just as this dusk
I am extinguishing.
ஓவியத்தில் மறைகிறேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் ஜன்னலுக்கு வெளியே ஒரு பறவை
இருளை நோக்கிப் பறந்துக் கொண்டிருக்கிறது.
அது இரவை அடைய விரும்புகிறதா,
அல்லது வெளிச்சத்திலிருந்து தப்பிக்கிறதா…?
சாம்பல் நிற வானம் தன் மேகங்களால்
இந்த நாளின் இறுதியின் முகத்தில் சாமரம் வீசுகிறது.
தொலைதூர மரங்கள் கருநிற எழுத்துக்களாகி
வாசிக்க முடியாத கவிதையாக நிற்கின்றன.
பகலில் பறவைகளின் குரல்களைத் தாங்கிய கிளைகள்
இப்போது வெறுமையின் எடையைத் தாங்குகின்றன.
ஜன்னல் கம்பிகளில் சிக்கியிருக்கும் மாலை
மெல்ல மெல்ல தன் உடலை உரித்து இரவாகிறது.
என் அறைக்குள் நுழையும் காற்று
கருமையின் வாசனையாகி கமழ்கிறது.
பறவையின் சிறகுகளில் படிந்த இருள்
எனக்குள்ளும் சிறிது சிறிதாக இறங்குகிறது.
ஜன்னலை மூடி அமர்கிறேன்.
பறவை, வானம், மேகங்கள், இருள்
அனைத்தும் என் தனிமையை வரைகின்றன.
அந்த ஓவியத்தில் இந்த மாலையைப்போலவே
அணைந்துக்கொண்டிருக்கிறேன் நான்.
-வலங்கைமான் நூர்தீன்
THEEPIKA THEEPA
A POEM BY
THEEPIKA THEEPA
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
ANANDHAN
ALSO HAD A LIFE

There was a life for Anandhan also
Who used to be with tyre and stick
coming to the roadside shop
inside the laughing eyes of he
wearing pin-attached half-pants
and with cat-fur back
there was the pride of a car.
He who would buy sugar for five rupees
and silk -egg sambol for half-a-rupee
buying a kadabu sweet for the remaining 10 paise
and concealing it inside jaw
would go flying
Catching dragonflies and make them fly
with thread tied
Catching crow and tying soda-lid
make them fly
What would his days spent thus
do for hunger
they stealthily stoned the green mangoes
His mother plucking grass and
Reaching home late with twenty rupees
Chasing away the sleeping cat
and lighting the stove
would provide him hot lunch.
Neither he who went barefoot
and studied in Maha Vidhyalaya
Nor his family
had any dream about education.
Hunger
Hovering around hunger they crept and
spread
Those children
growing under the hot sun
God kept them away from dire ailments
not being vengeful towards the little ones
For the father who covered with sacks
his children
lying huddled all too close
in the tiny hutment
throughout the night
blisters and boils of
the next day’s hunger.
Even today Anandhan’s home
remains the same
with no Anandhan.
Deepika
ஆனந்தனுக்கும் ஒரு வாழ்விருந்தது.
----------------------------------------------------------
பெட்டிக் கடைக்கு வருகிற
ஆனந்தனுக்கும் ஒரு வாழ்விருந்தது.
ஊசி குத்திய காற்சட்டையும்,
பூனை மயிர் முதுகுமாய் சிரிக்கிறவனின்
கண்களுக்குள்
ஒரு காரின் பெருமிதமிருந்தது.
ஐஞ்சு ரூபாய்க்கு சீனிச் சரையும்
ஐம்பது சதத்துக்கு
சில்க் முட்டைச் சம்போவும்
வாங்கிக் கொண்டு போகிறவன்,
மிச்சப் பத்துச் சதத்துக்கு
ஒரு கடாபி இனிப்பு வாங்கி
கொடுப்புக்குள் புதைத்துக் கொண்டு
பறந்து போவான்.
தும்பிகளைப் பிடித்து நூல் கட்டிவிடுவதும்,
காகத்தைப் பிடித்து
சோடாமூடி கட்டி விடுவதுமாய் கழிந்த
அவன் பகல்கள்
பசிக்கு என்ன செய்யும்?
கள்ள மாங்காய்களுக்கு கல்லெறிந்தன.
புல்லுப் பிடுங்கி விட்டு,
இருபது ரூபாவோடு
பின்னேரம் வீட்டுக்குப் போகிற
அவனின் தாய் தான்,
பூனை கலைத்து அடுப்பு மூட்டி
கொதிசோறு கொடுப்பாள்.
வெறுங்காலோடு போய்
மகா வித்தியாலத்தில்
படித்து விட்டு வந்தவனிடமும் சரி,
குடும்பத்திடமும் சரி
கல்வி பற்றி
எந்தக் கனவுமே இருந்ததில்லை.
பசி.
பசியை சுற்றிக் கொண்டு தான்
அவர்கள் படர்ந்து கிடந்தார்கள்.
குஞ்சும், குறுணியுமாய்
வெயிலுக்குள் வளர்ந்த பிள்ளைகளுக்கு
நோயென்று பெரிதாய்
வஞ்சம் வைத்ததில்லை தெய்வம்.
பொட்டுக் குடிசைக்குள்
ஒட்டிக் கொண்டு தூங்குகிற
தன் குழந்தைகளுக்கு
சாக்கைப் போர்த்தி விடுகிற
நாட்கூலித் தகப்பனுக்கு
இரவெல்லாம்
நாளைய பசியின் கொப்பளங்கள்.
இன்றைக்கும்
அப்படியே தானிருக்கிறது
ஆனந்தனில்லாத ஆனந்தன் வீடு.
------ xxx -------
தீபிகா
SRINESAN
MARIMUTHU SIVAKUMAR
A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
ALIENS
It invited one from my world too
As that one I attended
The other world condemned
this world’s vicious culture of weaponry
Witnessing the fraudulent trips
of this world that has resources
in abundance
the leaders of the alien world
criticised caustically
The clownish leaders of the world
not having the capacity to protect the globe
contemplating on shifting man to Mars
should be severely punished
they swore
For catching hold of those leaders
Not having the skill and will to save the world
And to throw them in fire
In the alien world
They sent me again to this world
I was changed into
millions of sun-rays
For crushing the demons of weapons
that dominate the world
proving dreadful
I turned into an armament
Marimuthu Sivakumar
வேற்றுலக மனிதர்கள்.
வேற்றுலகம் அவசர சந்திப்பொன்றிக்காக கூடியது.
எம் உலகத்திலிருந்தும் ஒருவரை அழைத்திருந்தது.
அவ்வொருவனாக நான் சென்றிருந்தேன்..
உலகத்தின் ஆயுத கலாசார வன்மத்தை வேற்றுலகம் கண்டித்தது.
அத்தனை வளங்களை கொண்ட உலகத்தின் நேர்மையில்லா பயணங்களை கண்டு மிக கடுமையாக வேற்றுலக தலைவர்கள் விமர்சித்தனர்.
உலகை காக்கும் திறனை இழந்து
செவ்வாயில் மனிதனை குடியேற்ற நகரும் கோமாளித் தலைமைகள் தண்டிக்கப்பட வேண்டுமென சூளுரைத்தனர்...
உலகை காக்க திறமையற்ற தலைவர்களை பிடித்து வேற்றுலகத்துள் தீயிலிட என்னை மீண்டும் உலகிற்கு அனுப்பினர்...
பல்லாயிர சூரிய கதிர்களாக நான் மாற்றப்பட்டேன்...
உலகை ஆட்டிப்படைக்கும் ஆயுத பேய்களை நசுக்க ஆயுதமானேன்...
~~~~~
மாரிமுத்து சிவகுமார்
S.J.BABYAN
A POEM BY
S.J.BABYAN
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Falling as seed
rising and spreading branches
there stood the Tree.
It thought of giving
shade and fruits.
As birds came and sat
It reached the zenith of bliss.
Each building nest in a branch
They so captured it!
The names of branches changed;
The tree’s name alone
None remembered.
The hand that shared the fruits
Remaining empty
Those who shared the nests
Leapt in joy reveling.
The darkness of roots
None has ever viewed.
The green of the fresh leaves alone
They acclaimed.
None cared about the roots
embracing the soil.
Sitting in branches touching the sky
They would draw borders
Those who reposed in the shade
Forgot to write the history of Sun
Each leaf
Called its green
A separatee category.
But
Juice is one and the same
Those who spoke close to your ears
When the wind blew
When storm arrived
Flew in search of their own sky
The roots that borne that land
They didn’t note even in the map.
In the end
The tree alone
Remained standing there in silence
For
It knows
The land can be captured
Fruits can be plucked
But the memories of roots
entrenched deep down
none can encroach.
வித்தாக விழுந்து
எழுந்து கிளை பரப்பி
நின்றது மரம்.
நிழல் கொடுத்து
கனி கொடுக்க அது
நினைத்தது.
பட்சிகள் வந்தமர
ஆனந்தத்தின் எல்லைக்கே
சென்றது.
ஆளுக்கொரு கிளையில்
கூடமைத்து கையகப்படுத்தின
அவை!
கிளைகளின் பெயர்கள்
மாறின;
மரத்தின் பெயர் மட்டும்
யாருக்கும் நினைவில்லை.
கனிகளைப் பகிர்ந்த கை
காலியாகவே இருந்திட
கூடுகளைப் பகிர்ந்தவர்கள்
குதித்து குதூகளித்தனர்.
வேர்களின் இருளை
யாரும் இதுவரை பார்த்ததில்லை.
பச்சிலைகளின் பசுமையை
மட்டும் கொண்டாடினர்.
மண்ணை அணைத்திருந்த
வேர்களைப் பற்றி
யாரும் பேசுவதில்லை.
வானம் தொட்ட
கிளைகளில் அமர்ந்து
எல்லைகளை வரைவர்.
நிழலில் ஓய்ந்தவர்கள்
வெயிலின் வரலாற்றை
எழுத மறந்தனர்.
ஒவ்வொரு இலையும்
தன் பச்சையை
தனிச்சாதி என்றது.
ஆனால்
சாறு ஒன்றுதான்.
காற்று வந்தபோது
காதோரம் பேசியவர்கள்,
புயல் வந்ததும்
தனக்கான
வானத்தைத் தேடிப் பறந்தனர்.
அந்த நிலத்தை
தாங்கிய வேர்களை
வரைபடத்தில் கூட
குறிக்கவில்லை.
இறுதியில்,
மரம் மட்டும்
மௌனமாக நின்றது.
ஏனெனில்
அதற்குத் தெரியும்.!
நிழலைக் கைப்பற்றலாம்.
கனியைப் பறித்துக் கொள்ளலாம்.
ஆனால்,
மண்ணின் ஆழத்தில்
பதிந்திருக்கும்
வேர்களின் நினைவை
யாராலும் ஆக்கிரமிக்க முடியாது.
செஜெ பபியான்
.jpg)
























.jpg)