INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, September 4, 2026

ATHMAJIV

 POEMS BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


......................................................முன்குறிப்பு: * நட்பினருக்கு வணக்கம். கவிஞர் ஆத்மா ஜீவ் நலநிதிக்கு உங்களால் முடிந்த நன்கொடையளித் தும், உங்களால் முடிந்த நன்கொடைகள் கிடைக்க வழி செய்தும் உதவும்படி வேண்டிக்கொள்கிறேன். 

நன்கொடையளிக்க கடைசி நாள் இம்மாதம் 15ந் தேதி.

நன்கொடையளிக்கவேண்டிய ஜிபே எண் 7845576241

..............................................................................................................

POEMS BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


I still remain

in this cabin

Ho, Friendly Flower.



After very many years

I utter your name

Once again today.


You are the indistinct warmth  of

one half of mine.


It was you who taught me 

The language of Motherhood 

hiding inside me.


Inside the unread pages of

The story unwritten of

He who couldn’t live without attachments

And turned a prey to the man-eaters 

Who feed on his affection

You still remain

Alive.


In the almirahs of forgotten memories

Escaping the termites of sorrow

infesting even minuscule reminiscences

You remain still alive

deep down...


Being in the midst of all these humans

who move on with the flow of Time

I remain still here

As signifying a moving doll.


In the midst of my mass of words

that none reads

the noise of angst keeps sounding

in silence.


I remember those words of yours

Uttered before many years

Smilingly - “Just ignore those who understand not

the language of silence

and keep going”.


I recall now.

“The language of silence

would always echo as deafening sound”

True, Blossom Buddy....


Time has made the hands of he 

who penned Poetry

to stretch out for alms.


I, being crushed under the wheels of poverty

My scream seems to 

Stay outside ears many. 


Wearing the garment of  humiliations

I stand stark naked 

as personification of contradictions.


In this cabin called body

I

Still remaining alive


இந்த அறைக்குள்தான்

இன்னுமிருக்கிறேன்

சிநேகப்பூ.


பல வருடங்களுக்குப் பிறகு

மீண்டும் உன் பெயரை

உச்சரிக்கிறேன் இன்று.


என்னொரு பாதியின் உருவற்ற

மென்மை நீ.


எனக்குள் ஒளிந்திருக்கும்

தாய்மையின் மொழியை

கற்றுத் தந்தவள்.


பற்றர வாழ முடியாதவனின்

பாசத்தை தின்னும் புறந்தின்னிகளின்

கொடுரப்பசிக்கு இரையாகிப் போனவனின்

எழுதப்படாத கதையில்

வாசிக்கப்படாத பக்கங்களுக்குள்

இன்னும் நீ

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்.


மறக்கப்பட்ட ஞாபகங்களின் அலமாரியில்

சின்னஞ்சிறு நினைவுகளையும் அரித்த

துயரக் கரையான்களிடமிருந்து தப்பித்து

இன்னும்தான் உயிர்த்திருக்கிறாய்

உள்ளுக்குள் நீ.


காலத்தின் நகர்வுகளில் நகர்ந்து செல்லும்

இத்தனை மனிதர்களின் இடையில் நானும்

நகர்ந்து கொண்டு

இன்னும்தான் இங்கிருக்கிறேன்

அசையும் பொம்மையின் அடையாளமாய்.


யாரும் வாசிக்காத என்

சொற்களின் கூட்டத்திற்கிடையில்

சோகத்தின் சத்தம் ஒலித்துக் கொண்டுதான்

இருக்கிறது மெளனமாக.


"மௌனத்தின் மொழி புரியாதவர்களை

புறந்தள்ளிப் போய்கொண்டே இரு" என்று

அன்றொருநாள் நீ

புன்னகைத்தபடி கூறியதை

நினைத்துக் கொள்கிறேன் இப்போது.


"மௌனத்தின் மொழி எப்போதும்

பெருஞ்சப்தமாகத்தான் எதிரொலிக்கும்”

உண்மைதான் சிநேகப்பூ.


கவிதை எழுதியவனின் கைகளை

ஏந்த வைத்து யாசிக்க வைத்தது

காலம்.


வறுமையின் சக்கரத்தில் நசுங்கிக் கதறும்

என் சொற்களின் சத்தம்

யார் காதிலும் விழுவதாயில்லை.


அவமானங்களின் ஆடையணிந்து

நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறேன்

முரண்களின் மொத்த உருவமாய் இன்று.


உடல் என்ற இந்த அறைக்குள்

உயிருடன்தான் இருக்கிறேன்

இன்னும் நான்.


ஆத்மாஜீவ் :  #அகபுத்தகம்_IB_68  : #சிநேகப்பூ


(2)


It was from the day that I parted from the hand that held mine
I understood the meaning of the word Orphan.

Mother’s hand
Father’s hand

My daughter and son held my hand
Now they don’t.

Today its comprehension
Seems to me having different dimension

I know not whether they realize  it
Yet I do feel the word Aloneness.

As she has become half of mine
I can’t disunite my wife’s hand

One who is brave always
Since the day I had stretched my hand, begging
She has turned disintegrated; lonely.

Just as the words of poet beseeching
None would be accompanying
in the end.

With my one hand
 I softly hold the other.

Before the moisture of water 
poured on the soil
gets dried up
Should reach my place...
That’s all.

என் கையைப் பிடித்திருந்த கையை
விட்டுப் பிரிந்த நாள்முதல்தான் புரிந்தது
அனாதை என்ற சொல்லின் அர்த்தம்.

அம்மாவின் கை
அப்பாவின் கை

என் கையை பற்றிப் பிடித்திருந்தார்கள்
மகளும் மகனும்.
இப்போது விட்டு விட்டார்கள்.

இன்று அதன் அர்த்தம்
வேறுமாதிரி இருக்கிறது
எனக்கு.

அவர்கள் இதை உணர்ந்தார்களா என்று
தெரியாது என்றாலும் நான்
தனிமை என்ற சொல்லை உணர்கிறேன்.

ஒருபாதி கலந்து விட்டதால்
மனைவியின் கையை தனித்து
பிரிக்க முடியவில்லை என்னால்.

எப்போதும் தைரியமாக இருப்பவள்தான்
நான் கையேந்திய நாள்முதல்
தனிமைப்பட்டு விட்டாள்
யாசிக்கும் கவிஞனின் சொற்களைப் போல.

யார் கையும் உடன்வரப் போவதில்லை
கட்டங்கடைசியில்.

என் கை ஒன்றை மறுகையால்
மெல்லப் பிடித்துக் கொள்கிறேன்.

மண்ணில் ஊற்றிய தண்ணீரின் ஈரம்
உலர்ந்து போவதற்குள்
ஊர் போய் சேரவேண்டும்
அவ்வளவுதான்.

ஆத்மாஜீவ்

(3)
The anguished cries of those roots 
buried deep down
Those birds knew not
They built their nests in the branches
Relished fruits – unripe and ripe
Many a wayfarer reposed there.
Tree too cannot escape the Seasonal cycles
It accepted the different seasons 
Without any complaint.
Though all the leaves withered and fell down
The tree didn’t feel sad.
Leaves would sprout anew
It very well knew.
It cursed the merciless hearts of some
Proceeding to cut the branches of tree for firewood.
It is in the branches that birds build their nests.
Seeing that  the number of birds’ nests
Has gone down
It felt sad.
Unripe ripe fruits too
Are reduced in number.
Have grown old.
Roots having no strength  to suck moisture
_ so it began cursing its own self.
As fruits became less
The birds too shifted their nests 
to some other trees
Also,  due to branches getting reduced
When a terrible tornado lashed
The taproot couldn’t withstand
The pain unbearable of separating from
the soil
The roots couldn’t endure.
In the well of a night
When 
Deadly wind blew
Coming off the land
The giant tree remained 
lying on the land
roots were seen out
wet utmost.

புதைந்திருக்கும் வேர்களின் குமுறல்களை
அந்த பறவைகள் அறியவில்லை.
மரக்கிளைகளில் கூடுகள் கட்டின.
காய்கனிகளை ருசித்தன.
வழிப்போக்கர்கள் பலரும்
இளைப்பாறினார்கள்.
பருவகாலச்சுழற்சியிலிருந்து
மரம் மட்டும் விடுபடுமா.
எல்லாக் காலங்களையும் 
முணுமுணுப்பின்றி ஏற்றுக் கொண்டது.
எல்லா இலைகளும் உதிர்ந்தபோதும்
மரம் வருத்தப்படவில்லை.
மீண்டும் துளிர்க்கும் என்று
அதற்கு தெரியும்.
மரக்கிளைகளை
விறகுக்காக வெட்டிப் போகும்
சிலரின் ஈரமற்ற நெஞ்சத்தை சபித்தது.
மரக்கிளைகளில்தான் பறவைகள்
கூடுகளை கட்டிக் கொள்கிறது.
இப்போது
பறவைகளின் கூடுகளின் எண்ணிக்கை
குறைந்து போனதை கண்டு வருந்தியது.
காய்கனிகளும் குறைய ஆரம்பித்தன.
மரத்திற்கு வயதாகி விட்டது.
ஈரம் உறிஞ்ச திராணியற்ற வேர்கள்
என்று
தன்னைத்தானே சபிக்கத் துவங்கியது.
 பழங்கள் குறைந்ததால்
பறவைகள் தங்கள் கூடுகளை
இடம் மாற்றிக் கொண்டது.
மரக்கிளைகள் குறைந்ததாலும்தான்.
கடும் புயல் ஒன்று வந்தபோது
ஆணிவேரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
நிலத்திலிருந்து பிரித்துக் கொள்ளும்
அம்மாபெரும் வேதனையை வேர்களால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒரு இரவின நடுசாமத்தில்
பெரும்காற்று ஒன்று வீசியதில்
நிலத்திலிருந்து பிரிந்து
நிலத்திலேயே விழுந்து கிடந்தது
மரம்.
வேர்கள வெளியே தெரிந்தன
நிறைய ஈரத்துடன்
ஆத்மாஜீவ்

(4)

Their palms are empty
I continue begging for alms
My palms  too remain empty

Behind the screen
They collect my  tears
That quenches their thirst.

Mortgaging my self esteem prestige and what not
I now stand at the street corner
With hands stretched out
Begging
I am

About those who
Witnessing my sufferings 
Turning the other way
and go past
I have no complaints.

In the past
My bowl was brimming with
Words.
Today
Just the sounds of their final breath
are heard.

Those who go beyond me
Turn and see
My turbulent heart

The wail of my soul oscillating
in the spot where I had lost 
my Pride and Poise
go and hide
inside 
words unwritten.

Dipping my tears
in Night’s black
I draw a face
That stands as 
the statue of sorrow.

அவர்களின் கைகள் காலியாக உள்ளன.
நான் யாசிப்பதை தொடர்கிறேன்.
எனது கைகளும் காலியாக உள்ளது.

திரைமறைவில்
என் கண்ணீர்த் துளிகளை
சேகரிக்கிறார்கள் அவர்கள்.
அது
அவர்களின் தாகம் தணிக்கிறது.

எனது மானஅவமானங்களை
அடகு வைத்து இப்போது
தெருமுனையில் வந்து நிற்கிறேன்
கைகளை ஏந்தி யாசித்தபடி
நான்.

என் துயரங்களை
கண்டுங்காணாமல்
கடந்து செல்பவர்கள் பற்றின
புகார்கள்  ஏதுமில்லை
என்னிடம்.

முன்பெல்லாம்
சொற்கள் நிறைந்திருந்தது
எனது பாத்திரத்தில்.
இன்று அதன் இறுதி மூச்சின்
சப்தங்கள் மட்டுமே கேட்கிறது.

என்னைக் கடந்து செல்பவர்கள் 
திரும்பிப் பார்க்கிறார்கள்
அலைப்புறும் என் மனத்தினை.

எனது கம்பீரத்தை தொலைத்த இடத்தில்
ஊசலாடும் என் ஆன்மாவின் கதறல்
எழுதப்படாத வார்த்தைகளுக்குள்
ஔிந்து கொள்கிறது.

இரவின் கருமையில்
எனது கண்ணீரைத் தொட்டு
ஒரு முகத்தை வரைகிறேன்
அது
துயரின் சிலையாக நிற்கிறது.

ஆத்மாஜீவ்

(5)

There my bird
circling in the sky
With direction lost

Not knowing where to migrate
Right in front
Weather keeps changing for ever
 
In the soft fluttering of 
the wings of bird
that wander in search of 
a place to recline
My poetry is being written.

திக்கு திசை தெரியாது
வானில் வட்டமடிக்கிறது
என் பறவை.

நேரெதிரில்
மாறிக் கொண்டேயிருக்கிறது
வானிலை.

இளைப்பாறுவதற்கு ஓர்
இடம் தேடி
அலைகிற பறவையின்
மெல்லிய சிறகசைப்பில்
எழுதப்படுகிறது
என் கவிதை.

ஆத்மாஜீவ்

(6)


In dualities 
Life remains clinging 
in one alone

With the hope that 
it would dawn
Looking at the sky
the flower’s wait 
would stay alive

Is Life drawn?
in the elongating night’s curtain

இருமைகளில் ஒன்றில் மட்டுமே
ஒட்டிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை. 

விடிந்து விடும்
என்ற நம்பிக்கையுடன்
வானத்தைப் பார்த்தபடி
உயிர்த்திருக்கும்
ஒரு பூவின் காத்திருப்பு.

நீளும் இருளின் திரைச்சீலையில்
வரையப்பட்டிருக்கிறதோ வாழ்வு.

ஆத்மாஜீவ் 

(7)
PLEASE STAY WITH ME, MY FRIEND
You
be here, My Friend,
by my side

 I float in faith
always

Faith in God Satan
Ghosts Demons Spirits
and on Humans

I am one having faith 
in the dreams that come during sleep
and several  realities
when awake

From God to realities
I kill them too.

That resurrection would happen
again and again _

This faith of mine
with no change remains

Killing God
I wake up Satan
Slicing Satan’s head
I fix God’s face.

This is how
killing any and all
I pursue resurrection
with a murderous sword.

Today – your turn

Now you kill me
After I am resurrected
please don’t go away

It is you alone 
sitting inside 
is still left
without leaving me.

Please remain by my side, Friend
Forever.

என்_அருகிலேயே_இரு_நண்பா

நீ
இங்கேயே இரு நண்பா.
என் அருகில்.

எப்போதும் நான்
நம்பிக்கையில் மிதப்பவன்.

கடவுள் சாத்தான்
பேய் பிசாசு ஆவிகள் 
மற்றும்
மனிதர் மீதான நம்பிக்கைதான்.

உறங்கும்போது வரும் கனவையும்
விழித்திருக்கையில்
சில நனவுகளையும்
நம்பிக் கொண்டிருப்பவன்.

கடவுள் முதற்கொண்டு
நனவுகள்வரை
கொலை செய்தும் விடுகிறேன்.

மறுபடி மறுபடி
உயிர்த்தெழுதல் நடக்குமென்ற
எனது நம்பிக்கையில்
மாற்றம் ஏதுமில்லை எனக்கு.

கடவுளை கொலை செய்து
சாத்தானை எழுப்புகிறேன்.
சாத்தானின் தலையை வெட்டி
கடவுளின் முகம் பொருத்துகிறேன்.

இப்படித்தான்
ஒவ்வொன்றையும் கொலை செய்து
உயிர்த்தெழுவதை பின்தொடர்கிறேன் கொலைவாளுடன்.

இன்று உன் முறை.

இப்போது என்னை நீ
கொன்றுவிடு.
நான் உயிர்த்தெழுந்தபின்
தயவுசெய்து சென்று விடாதே.

உள்ளே உட்கார்ந்திருக்கும்
நீ ஒருவன்தான்
விட்டு விலகாது மிச்சமிருக்கிறாய்
எனக்கு.

என் அருகிலேயே இரு நண்பா
எப்போதும்.

ஆத்மாஜீவ்


(8)

The pain of not being able to return
to the passage gone beyond
is being relived
by going there
with the wings of words
is what the grand world
of the writer indeed.

The height of  release
Is but a hiatus.

That 
would be forever conversing 
in the language of silence.

That is
the soft  music of Life
Those having ears listen
When the heart wanders 
in this space
That can’t be filled  with Life
Deficiency fills and swells
I fancy

The bird craving to fly
in the bygone sky
is the writer’s heart  - Oh My!

கடந்துபோன பாதைக்கு
திரும்ப முடியாத வலியை
வார்த்தைச் சிறகுகளால்
மீளச் சென்று வாழும் மனம்தான்
படைப்பாளியின் பெரும் உலகம்.

விடுபடுதலின் உயரம்
ஓர் இடைவெளி.

அது
மௌனத்தின் மொழியில்
பேசிக் கொண்டேதான் இருக்கும்.

அது
உயிரின் மெல்லிய இசை. 
காதுள்ளவர்கள் கேட்கிறார்கள்.

உயிரிட்டு நிரப்ப முடியாத
இந்த இடைவெளியில்
மனம் சஞ்சரிக்கும்போது
போதாமை நிரம்பி விடுமென
நினைக்கிறேன்.

கடந்து விட்ட வானத்தில்
பறக்கத் துடிக்கும் பறவை
படைப்பாளியின் இதயம்.

ஆத்மாஜீவ்  

VASANTHADHEEPAN

SHAHIBKIRAN THAKKAI

 SHAHIBKIRAN THAKKAI

THEEPIKA THEEPA

DR. A. AMULRAJ

 DR. A. AMULRAJ

S.FAIZA ALI

 A POEM BY 

S.FAIZA ALI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


PROTECTOR TURNED PREDATOR

I listened  taking time

With instincts intensely insisting

that I shouldn’t tire her out -

Only when needed

I enquired.

She had shed her pains

In little drops.

Only for making her feel assured

that her secret would be safeguarded

Words proved ineffective.

I become the mother hen

that embraces with its warm feathers

the chicken shivering in chill.

The  screeching voice that

scorched the cabin-walls

slowly subsides and turns silent.

O what a silence

wholesome silence

in those glistening  tender eyes

That which was described

with words

with gestures and movements….

and

In sobs…

That which I could realize

would suffice

for  filling the gaps 

My pen

 refuses to fit them 

into any ranking scales

The revolting vulgarities  of 

the protector turning predator

the resulting repugnance

I can never pen them 

conjointly 

with the scent of  wet jasmine.


வேலியே பயிரை மேய்தல்

சாவதானமாய் செவிமடுத்தேன்

களைப்படையச் செய்யக்கூடாதெனும் உள்ளுணர்வின் தீவிரங்களோடு

தேவையான இடங்களில் மட்டுமே வினவினேன்


அவள் தன் வலிகளைத் 

துளிகளாய் 

உதிர்த்திருந்தாள்


இரகசியம் பேணப்படும் 

என்பதை உணர்த்த மட்டும்

சொற்கள் பயன்படவில்லை..

கொடுகும் 

கோழிக்குஞ்சைக் 

கதகதக்கும் தன்னிறக்கையோடு 

சேர்த்தணைக்கும் தாய்ப்பறவையாகிறேன்.


அறைச்சுவர் முழுவதையும் 

தீய்த்தெறிந்த கீச்சுக்குரல்

மெல்லத் தணிந் தடங்கிற்று


எத்தனை அமைதி.. 

பேரமைதி 

பளபளக்கும் அப்பிஞ்சுக்கண்களுக்குள்


சொற்களால்.... 

உடல்மொழியால்....

விபரித்தவைகளை....

இன்னும், 

விசும்பல்களில்..... 

இடைவெளிகளை 

நிரப்பிக் கொள்ளுமளவிற்கு

நான் உணர்ந்தவைகளை

எந்தத் தரவரிசை அளவிடைகளூடும்

இட்டு நிரப்ப மறுக்கிறது 

என் பேனா


வேலியே பயிரை மேய்தலின் 

அசிங்கங்களின் 

அருவருப்புகளை 

இந்த

ஈர மல்லிகையின் நறுமணங்களோடு 

இணைத்துப் பதிவிட 

ஒருபோதும் என்னால் முடியாது . 


 எஸ்.பாயிஸா அலி

CONJEEVARAM SADASIVAM RAVINDRAMANI

SRINIVASAN ARUNACHALAM

 JEYANTHAN JESUDOSS

NESAMITRAN

RAM PERIYASAMI

 TWO POEMS BY 

RAM PERIYASAMI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


1. PENDULUM ‘S SHADE


     
 Just as a  boat  placed upside down

A book lays plugged into the shore.


For a long time the clock’s Cuckoo

dashing against it with its beak, pecking at it 

and pulling it backward


Finding that it is not throbbing

The wind turns the pages one by one


In the shade of the Pendulum 

of lunacy unconsolable

My inner world and I 

are withering


The two hairpin legs 

Intricately entwined

Weakened and frozen

Red Sanders hands

A sinned soul,

As life written in mud

The volume of my heartbeats

I have kept down for a while….


I see the fire of memories

Aflame on the sea…..


As the gullible poet who after 

penning a book

perpetually  waiting for a review…..

To this universe that has  my life 

written into  a Text

I feel duty-bound to tell 

one last thing…. Well _


The Memoirs of my Love

is made of memories make-believe.


பெண்டுலத்தின் நிழல்

----------------&

படகைக் கவிழ்த்து வைத்தாற்போல்

புத்தகமொன்று மணற்கரையில் சொருகியிருக்கிறது


நெடுநேரமாகக் கடிகாரக்குருவி

தன் அலகால் முட்டிப் பின் கொத்திப்

பின்னிழுத்துப் பார்க்கையில்,

அதிர்வற்றிருப்பதை அறிந்தபின்

காற்று ஒவ்வொரு பக்கமாய் புரட்டுகிறது


தேற்ற முடியாதவொரு

பைத்தியத்தின்

பெண்டுல நிழலில் உலர்ந்து

கொண்டிருக்கிறோம்

நானும் என் அகவுலகமும்


பிணைத்துக் கிடந்த இரண்டு கொண்டையூசிக்கால்கள்,

தளர்ந்து உறைந்த செம்மரக் கைகள்,

ஒரு பாவப்பட்ட ஆன்மா,

சேற்றில் எழுதப்பட்ட உயிரென

என் இருதயத்துடிப்பினளவை

சற்றுக் கீழே வைத்திருக்கிறேன்...


ஞாபகங்களின் தீ

கடலின்மேல் எரிவதைக் காண்கின்றேன்


ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு

விமர்சனத்துக்காகக் காத்திருக்கும்

எளிய கவிஞன் போல..


எனது உயிரை உரையாய் எழுதி வைத்திருக்கும்

இப்பிரபஞ்சத்திடம்

கடைசியாகச் சொல்ல

ஒன்றே ஒன்று கடமைப்பட்டிருக்கிறேன்...


என் காதலின் 

சுயசரிதை

நினைவுகளின் 

புனைவுகளால் ஆனது.


ராம் பெரியசாமி


(2)



Tunround once 
and see.

For the doors opened 

without your knowledge

Life might still  be 

calling thee….

ஒருமுறை

திரும்பிப் பார்

உனக்குத் தெரியாமல்

திறந்திருக்கக்கூடிய

ஒரு கதவுக்காக

வாழ்க்கை

இன்னும் உன்னை

அழைத்துக்கொண்டிருக்கலாம்.

ராம் பெரியசாமி

MKM SHAKEEB

IYARKKAI

 A POEM BY 

IYARKKAI


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

NOISY FOLKS

Wonder why

the puppy is given

another name


Even Dog is a name

given by someone sometime


Someone who doesn’t like someone

Someone who doesn’t admire someone

Someone who fears someone 

would dominate

give another name to dog

and feel relieved somewhat.


Dog

being Dog

and being not that

what would it be to 

a dog in fact


For those coming in front _

Master

Lady of the House

Kids

Those seated in the lap of old age

For one and all

exclusive  ‘wagging tail’


How so exclusive names!

How would one and all

view their other name in all


Mutually 

Nameless.


ஓசை மாந்தர்

*****************

எதனாலோ தெரியவில்லை

ஒரு நாய்க் குட்டிக்கு

வேறு பெயர் வைக்கப்படுகிறது.


நாய் என்பதும்

யாரோ வைத்த பெயர்தான்.


யாரோவை இரசிக்காத

யாரோவை விரும்பாத

அல்லது

யாரோ மேலாதிக்கம் செய்திடுவார்கள்

என்றஞ்சுகிற யாரோ

ஒரு நாய்க்கு

என்னவோ பெயரிட்டு

ஆசுவாசம் அடைகிறார்கள்.


நாய்

நாய் என்பது பற்றி

வேறேதோ என்பது பற்றி

என்னவாக இருக்கும்.


எதிர்படும்

எஜமான்

எஜமானி

குழந்தைகள்

முதுமையின் மடியிலிருப்போர்

எல்லோருக்கும்

பிரத்தியேகக் குழைதல்.


எவ்வளவு பிரத்தியேகமான

பெயர்கள்.


யாருக்கும்

அவர்களது

அந்தப் பெயர் பற்றி

என்னவாக இருக்கும்.


பரஸ்பரம்

பெயரற்றவர்கள்.


 இயற்கை

HAVI

 A POEM BY 

HAVI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


CELEBRATING THE RIVER


 So long before us

The river has been here

Just as grains

We too have come with the river

And rooted in the land

As plants

After descending from the mountain

We sowed the grains as seeds

A handful for each family

That was a windy season

On a full moon day

We brought sprouted grain pots

and offering them 

thanked the river.

Then step by step

the grains swimming in the river

climbed on the mound of Time

We brought into being crops

The crops started flourishing 

and people began to prosper.

On another day

On the bank of river

All gathered

And with Naayanam and Kombu entwining

With Urumi and Melam resonating

We defined the Thinai.

Paying our homage to the river

which was god-incarnate

for the land with crops flourishing

we christened Marutham thus.

Even today our body gives out

the scent of  soil

 No – the scent of river.

(*Written on an Aadiperukku Night)

*முளைப்பாரி - "A traditional ritual pot in which nine kinds of grains (Navadhanyam) are sown and grown for festivals." (திருவிழாக்களுக்காக ஒன்பது வகையான தானியங்கள் தூவி வளர்க்கப்படும் ஒரு பாரம்பரிய சடங்கு பானை) (கூகுளிலிருந்து)


ஆற்றை கொண்டாடுதல்

எமக்கு வெகு காலத்துக்கு 

முன்பே ஆறு இருந்தது 

தானியங்களைப் போலவே

நாங்களும் ஆற்றோடு வந்து 

நிலத்தில் தாவரமென 

வேர் விட்டோம்

மலையில் இருந்து 

இறங்கிய பிறகு 

ஒரு குடும்பத்துக்கு 

ஒரு கைப்பிடி 

தானியத்தை விதையிட்டோம் 

அது ஒரு காற்று காலம் 

ஓர் நிறைமதி நாளில்

முளைப்பாரி கொண்டு வந்து 

ஆற்றிலிட்டு நன்றி சொன்னோம்

பின்னர் படிப்படியாக 

தானியங்கள் ஆற்றில் நீந்தி 

காலத்தின் மேடேறின

பயிர்களை உருவாக்கினோம் 

பயிர்கள் செழிக்கவும்

குடிகள் தழைக்கவும் தொடங்கின

மற்றொரு நாளில் 

ஆற்றின் கரையில் 

அனைவரும் கூடி

நாயனமும் கொம்பும் குலாவி

உறுமியும் மேளமும் இசைத்து 

திணைகளை பகுத்தோம் 

தெய்வமாகி நின்ற 

ஆற்றை வணங்கி 

பயிர்கள் செழித்த நிலத்துக்கு 

இப்படித்தான் மருதம் 

என்று பெயர் சூட்டினோம்

இன்றைக்கும் எங்கள் 

உடலில் உணரலாம்

மண்ணின் வாசத்தை 

இல்லையில்லை 

ஆற்றின் வாசத்தை 

•••

3 ஆகஸ்டு 25

ஆடிப் பெருக்கு இரவில்

INSIGHT MARCH 2021

INSIGHT, JULY 2026 - A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPROARY TAMIL POETRY

 INSIGHT, JULY 2026