INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, August 31, 2026

ATHMAJIV

 THREE POEMS BY 

ATHMAJIV



Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



None from above

noticed.


The child drawn 

in the semblance of God

growing  into an adult

returns to a cliff.


Alive and kicking

it reaches the hands of 

the sculptor

 waiting to carve Satan.


With the removal of 

each particle

Satan alive 

is all set to come out.


He who comes

and stands next to Satan 

on the carved boulder

laughs:

“The same hands that carved me 

resembling  God’s 

when I was a child

had sculpted the semblance of Satan

Today’


The sculptor’s hands shiver.


‘indeed it is God that

 reality has turned into Satan’

-Observing thus

goes away Satan

pain-borne.


Now the sculptor’s hands

lie resting.


வானத்திலிருந்து கவனிக்கவில்லை

யாரும்.


கடவுளின் சாயலில் வரைந்த குழந்தை

வளர்ந்து பெரியவனாகித் திரும்புகிறது

ஒரு மலைப்பாறைக்கு.


சாத்தானை செதுக்க காத்திருக்கும்

சிற்பிக்கு கிடைக்கிறது உயிருடன்

அது.


ஒவ்வொரு துகள் அகலும்போதும்

உள்ளிருந்து வெளிவர துடிக்கிறது

உயிருடன் சாத்தான்.


செதுக்கப்பட்டப் பாறையில்

நிற்கிற சாத்தானுக்கு அருகில்

வந்து நிற்கிறவன் சிரிக்கிறான்.

"நான் 

குழந்தையாய் இருந்தபோது

கடவுளின் சாயலென 

செதுக்கிய கரங்கள்தான்

இன்று

சாத்தானின் சாயலை 

செதுக்கியிருக்கிறது'


சிற்பியின் கரங்கள் 

நடுங்குகின்றன.


"கடவுளைத்தான் 

சாத்தானாக்கி இருக்கிறது 

எதார்த்தம்" 

என்றபடி நகர்கிறது

வலிகளைச் சுமந்த சாத்தான்.


சிற்பியின் கரங்கள் இப்பொழுது

ஓய்வாக இருக்கின்றன.


ஆத்மாஜீவ் 


2.HOW MANY CABINS  STILL LEFT?

Facing Time that has wiped off 

all his dreams

 He asked just one question.


Losing his essential  self 

absolutely

Standing in the middle of a dense jungle

He was retrieving his soul 

buried under some unknown tree.


He separated his head from his torso

His hands remained stretched 

begging shamelessly

‘They who give are noble ones, 

those who give not….’

He swallowed 


the words that followed.

The right eye searched for a way 

to renew the lost vision of the left eye

At the time of death

Who would get this eye with 

ripe cataract.


Chasing words 

on behalf of the stomachs 

inside which

the demon of poverty 

danced deliriously

he begged all for alms

leaving none at all

Taking out poems of yester years

he quenched his hunger


For others too there would remain

dreams of their own to eat

so their hunger satiated.


For going to the other side of the revolving earth

and hide himself

doing away with all walls

he stood there bearing just the burdens


in the running train no place to sit

nor any spot to keep it and rest

the burden that has got into the heart

Alas where to place it at all


Coming out of the room

He never did return 


In Memory’s racks

How many remain as yet?


Unfastening the legs

That have grown weary in the

Incessant running with the query pursuing

Awaiting the arrival of hands 

that have gone to  beg

Not being able to wipe his tears

He remained standing at the door

Naked to the core.


மிச்சமிருக்கும் அறைகள் எத்தனை?

எல்லாக் கனவுகளையும்

அழித்துவிட்ட காலத்தின்முன்

ஒரேயொரு கேள்வியைதான் கேட்டான்

அவன்.


தன் இயல்பை முற்றாக இழந்து

அடர்வனத்தின் நடுவில்

ஏதோவொரு மரத்தின்கீழ்

புதையுண்ட ஆன்மாவை

மீட்டெடுத்துக் கொண்டிருந்தான்

அவன்.


தலையை தனியே கழட்டி விட்டான்.

ஈயென்று கைகள் ஏந்தியபடி இருந்தன.

இட்டார் பெரியோர், இடாதார்...

தொடர் வார்த்தைகளை

மென்று முழுங்கினான்

அவன்.


இடதுகண் இழந்த பார்வையை

புதுப்பிக்க வழிதேடியது வலதுகண்.


இறப்பின்போது யார்பெறுவார்

புரைமுற்றியக் இக்கண்ணை.


வறுமையின் கோரம் தாண்டவமாடிய

வயிறுகளின் சார்பாக சொற்களை துரத்தி

ஒவ்வொரு நபரிடமும் யாசித்தான்.


பழைய கவிதைகளை மீண்டும் எடுத்து

தன் பசியை போக்கிக் கொண்டான்.


மற்ற வயிறுகளுக்கும் மிச்சம் இருக்கும்

அவரவர் கனவுகள் தின்பதற்கு உணவாய்

அவரவர் பசி அடங்க.


சுழலும் பூமியின் மறுபுறம் போய்

தன்னை மறைத்துக் கொள்ள

எல்லாச் சுவர்களையும் அழித்து

சுமைகளை மட்டும் சுமந்து நின்றான்.


ஓடும் ரயிலில் உட்கார இடமில்லை

வைத்து இளைப்பாற இடமும் இல்லை.

இதயத்தில் ஏறிய பளுவை

எங்கேதான் இறக்கி வைக்க.


அறையை விட்டு வெளியே வந்தவன்

பின்மீண்டும் திரும்பவே இல்லை.


நினைவின் அடுக்குகளில் இன்னும்

மிச்சமிருக்கும் அறைகள் எத்தனை?


கேள்வியுடன் தொடரும் ஓட்டத்தில்

ஓய்ந்துபோன கால்களை கழட்டி

யாசகத்துக்குப்போன கைகளை எதிர்பார்த்து

வழியும் கண்ணீரை துடைக்க வழியின்றி

வாசலிலேயே நின்றிருந்தான்

ஆடையின்றி.


ஆத்மாஜீவ்  


3



In the dream of the hungry man

costly dishes being served.

He looks around searching for his 

starving family

But there was none

In front of him who likes not to eat all alone

the dishes come hand in hand and console him.

‘In their dreams too we would be served

So, eat to your heart’s content’ – They say.

But, refusing to believe

he wakes up his family members

They all get up startled

‘In your dreams were you served with 

delicious costly dishes?’

Asks he hurriedly.

And, they stare at him blankly.


பசித்திருக்கும் மனிதனின் கனவில் 

விலையுயர்ந்த உணவுகள் பரிமாறப்படுகிறது. 

தன் குடும்பத்தை தேடுகிறான். 

பசித்திருக்கும் குடும்பத்தினர்.

அங்கே யாருமில்லை.

தனியே உண்பதற்கு விரும்பாத 

அவன் முன்பு 

உணவுகள் ஒன்று சேர்ந்து 

சமாதானப்படுத்துகிறது.

அவர்களின் கனவுகளிலும் 

நாங்கள் பரிமாறப்படுவோம்

தாரளமாக வயிராற உணவு கொள்.

அவன் நம்பத் தயாராக இல்லை.

விழித்துக் கொள்கிறான்.

அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் 

தன் குடும்பத்தினரை எழுப்புகிறான்.

திடுக்கிட்டு எழுகிறார்கள் அனைவரும்.

"உங்கள் கனவில் 

விலையேறப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டதா"

அவசர அவசரமாக கேட்கிறான்.

அவர்கள் திருதிருவென பார்க்கிறார்கள் 

அவனை.

ஆத்மாஜீவ் 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - AUGUST 2026

 INSIGHT AUGUST, 2026 (a bilingual blogspot for contemproary tamil poetry) 2026insight.blogspot.com