A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

In sleep
I enter into dreams….
The dream hidden in the brain
Comes running
and sits in the inner eye.
The mountains viewing the dream
Off-loaded their angsts and burdens
one by one….
The mountain coming there
Narrated the tale of it cutting of its own ink-applied finger.
Another mountain that stood
Many feet above
came rolling
and stood there lamenting
That the warriors who broke the house it built and
Piled it up neatly
Are being felled mercilessly.
The mountain which many saw
And stood there in wonder and awe
Stood there with billhook machete
for ransacking the whales that had devoured
the reliefs and aids.
The mountain arrived last
wailed uncontrollably
claiming that Nature
had its kith and kin
buried deep in the sand.
The dream that gathered the pains and agonies of mountains
stood up to insert a new weapon
into my mind.
Now in the dream sprouting in my mind
weapons for liberation are
being manufactured…
If not,
the mountains would dare to
even kill my dream
ஒவ்வொரு மலைக்கும் கனவுகள் உண்டு
உறக்கத்தில்
கனவுகளினுள் நுழைகிறேன்...
மூளைக்குள் ஒளிந்திருந்த கனவு
ஓடி வந்து
மனக்கண்ணில் அமர்ந்து கொள்கிறது.
கனவை பார்த்த மலைகள்
தமது வேதனைகளையும்
சுமைகளையும் ஒவ்வொன்றாய் இறக்கி வைத்தன...
அங்கு வந்த மலை
தனது மை பூசிய விரலை
தானே வெட்டி வீசிய கதையை உரைத்தது.
பல அடி உயரத்தே நின்ற
இன்னொரு மலை
உருண்டோடி வந்து
தான் கட்டிய வீட்டினை உடைத்து அடுக்கிய வீரர்களை
வெட்டி வீழ்த்துவதாய் புலம்பி நின்றது.
பலரும் பார்த்து வியந்த மலை
தனக்கு வழங்கிய நிவாரணங்களை
விழுங்கிய திமிங்கிலங்களை சூரையாட வீச்சரிவாளோடு நின்றது.
இறுதியாய் வந்த மலை
தன் உறவுகளை
இயற்கை
மண்ணுக்குள் புதைத்துக்கொண்டதாக கதறியது..
மலைகளின் வலிகளை ஒன்று திரட்டிய கனவு...
புதியதொரு ஆயுதத்தை
என் மூளைக்குள் திணித்திட எழுந்தது.
இப்போது
என் மூளையில் முளைவிடும் கனவில்
விடுதலைக்கான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகிறது...
இல்லையென்றால்
மலைகள்
என் கனவினை கொலை செய்யவும் துணியும்.
~~~~~~~
மாரிமுத்து சிவகுமார்.


No comments:
Post a Comment