A POEM BY
VALANGAIMAN NOORDEEN
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Outside my window a bird
Is flying towards the dark
Does it want to obtain darkness
Or is it escaping from light…?
The ash-hued sky with its clouds
Is fanning the face of this day’s end
Faraway trees turning into black letters
And stand there as poem beyond reading
The branches that bore the birds’ voices during day
Now hold the burden of nothingness
The evening stuck in the window-bars
Peel its skin gradually and become Night
The wind entering my room
Turning into dark’s perfume
spreads its fragrance.
Darkness settled in the bird’s feathers
Alight inside me also little by little
I sit closing the window
Bird, sky, clouds, darkness,
All draw my aloneness.
In that sketch just as this dusk
I am extinguishing.
ஓவியத்தில் மறைகிறேன்
N
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் ஜன்னலுக்கு வெளியே ஒரு பறவை
இருளை நோக்கிப் பறந்துக் கொண்டிருக்கிறது.
அது இரவை அடைய விரும்புகிறதா,
அல்லது வெளிச்சத்திலிருந்து தப்பிக்கிறதா…?
சாம்பல் நிற வானம் தன் மேகங்களால்
இந்த நாளின் இறுதியின் முகத்தில் சாமரம் வீசுகிறது.
தொலைதூர மரங்கள் கருநிற எழுத்துக்களாகி
வாசிக்க முடியாத கவிதையாக நிற்கின்றன.
பகலில் பறவைகளின் குரல்களைத் தாங்கிய கிளைகள்
இப்போது வெறுமையின் எடையைத் தாங்குகின்றன.
ஜன்னல் கம்பிகளில் சிக்கியிருக்கும் மாலை
மெல்ல மெல்ல தன் உடலை உரித்து இரவாகிறது.
என் அறைக்குள் நுழையும் காற்று
கருமையின் வாசனையாகி கமழ்கிறது.
பறவையின் சிறகுகளில் படிந்த இருள்
எனக்குள்ளும் சிறிது சிறிதாக இறங்குகிறது.
ஜன்னலை மூடி அமர்கிறேன்.
பறவை, வானம், மேகங்கள், இருள்
அனைத்தும் என் தனிமையை வரைகின்றன.
அந்த ஓவியத்தில் இந்த மாலையைப்போலவே
அணைந்துக்கொண்டிருக்கிறேன் நான்.
-வலங்கைமான் நூர்தீன்


No comments:
Post a Comment