A POEM BY
JEYANTHAN JESUDOSS
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
I DON’T SIT FOR WRITING POEM
With its words
ever changing
in shape and structure
It searches for me day in and day out.
Getting into the dreams of he who remains
In blissful communion with prose, essays
It invites.
After I wake up with my sleep gone
I will surely write about thee, said I.
More than writing
You better get a divine vision of me
in the morning prayer with eyes closed,
it said.
After work
with the spine aching abominably
I dozed off in Metro.
When I woke up
right in front of me stood teary-eyed
She who had gone away
as dream unrealized.
While taking leave
It was not her tears that
fell scattering
It was Poem stamped upon
by fellow-passengers.
கவிதையை நான் எழுத அமர்வதில்லை
அது தன் உருமாறும் சொற்களோடு
அன்றாடம் என்னைத் தேடுகிறது.
கட்டுரைகளில் சல்லாபித்துக் கிடப்பவனின்
கனவுகளில் நுழைந்து அழைக்கிறது.
நித்திரை கலைந்து எழுந்தபின்
நிச்சயம் எழுதுவேன் உன்னை என்றேன்.
எழுதுவதை விட
என்னை தரிசி என்றது
கண் மூடிய காலைப் பிரார்த்தனையில்.
பணி முடிந்து முதுகொடிந்து
மெட்ரோவில் கண் அயர்ந்தேன்.
கண் விழித்தபோது
நீர் பெருக்கி நின்றிருந்தாள்
நீள் கனவாய் போனவள்.
விடைபெறும்போது
விழுந்து சிதறியது
அவளின் கண்ணீர் அல்ல
சக பயணிகளின் காலில் மிதிப்பட்ட
கவிதை .
- நோவா நதி



No comments:
Post a Comment