THREE POEMS BY
ABDUL SATHAR
Rendered in English by Latha Ramakrishnan(*first Draft)Not having the need to face
This world confusion-confounded….
What he does
He knows not at times….
He wants to embrace his fellowmen
and love them with all his heart….
But they shy away
Put off by his outward appearance….
With long dishevelled tresses
Uncouth attires
He remains…
Some make fun of him…
But his heart
Has inherent love for
The universe
And its species
And remains pure pristine.
Seeing how they view him
He wants to hide himself from humans….
He isolates himself
With fears and worries filling him
He languishes in an unnecessary
sense of guilt…
he realizes nothing
bothers not of anything
he wants to find a release
from all responsibilities…
At night
keeping awake for long
with his soulful eyes
Converses with the moon and stars
Luminous in the sky
He mixes hues in void…
That
Becomes surreal art
You call him a lunatic
But, he in fact is
an enlightened soul.
He sees things that ordinary humans
see not
All his elucidations are exclusive ones
as enticing the future.
His comprehensions deep
His ideas firm
And you call him insane
Precisely for this – yes?
He is already dead within…
Not having the need to realize anything
And he doesn’t want to live again
For the sake of the world
Outside.
Allow him to live on
As someone dead and gone
within
As a man insane
Instead of living In this world
where
all things fair and just
are extinct
and a life of righteousness
has become a rarity
Being in his own world
as mentally deranged
would be sheer bliss indeed!
இந்த குழப்பமான உலகத்தை
எதிர்கொள்ள அவசியமற்ற
மனம் பிறழ்ந்தவன் இவன்..
இவன் என்ன செய்கிறானென்று
இவனுக்கே சில சமயங்களில்
தெரிவதில்லை..
இவன் சக மனிதர்களை
அரவணைத்து
அன்பு பாராட்ட
எண்ணுகிறான்..
இவனது புறத்தோற்றத்தைக்கண்டு
அவர்கள் ஒதுங்குகிறார்கள்..
நீண்ட கலைந்த முடிகளுடனும்
சீரற்ற ஆடைகளுடனும்
காணப்படுகின்றான்..
சிலர் இவனை
எள்ளி நகையாடுகிறார்கள்..
இவனது உள்ளமோ
பிரபஞ்சம் மீதும்
உயிர்கள் மீதும்
உள்ளார்ந்த நேசம் கொண்டு
தூய்மையாக உள்ளது.
இவனைப்பற்றிய அவர்களது
எண்ணம் கண்டு
இவன் மனிதர்களிடமிருந்து
தன்னை மறைத்துக்கொள்ள
விரும்புகிறான்..
தன்னை தனிமைப்படுத்திக்கொள்கிறான்..
பயங்களும் கவலைகளும் ஆக்கிரமிக்க
தேவையற்ற தீவிர
குற்ற உணர்வில் உழல்கிறான்..
எதையும் உணர்வதில்லை..
எதைப்பற்றியும்
கவலை கொள்வதில்லை..
பொறுப்புகளிலிருந்து விடுபட
விரும்புகிறான்…
இவன் இரவில்
நெடுநேரம் விழித்திருந்து
தனது ஆத்மார்த்த விழிகளால்
வானில் ஒளிரும்
நிலவிடமும் விண்மீன்களுடனும்
உரையாடுகிறான்..
இவன் சூன்யத்தில்
வண்ணங்களை
குழைக்கின்றான்..
அது ..
மீமெய்மையியல் ஓவியமென
ஆகிறது..
இவன் மனம் பிறழ்தவனென
நீங்கள் கூறுகிறீர்கள்..
ஆனால் இவன்
ஞானம் மிகுந்தவன்..
மனிதர்கள் காணாததை
இவன் காணுகின்றான்.
இவனது விளக்கங்கள் அனைத்தும்
எதிர்காலத்தை ஈர்க்கக்கூடியது போன்று
தனித்துவமானவை..
இவனது புரிதல் ஆழமானது..
இவனது கருத்துக்கள்
உறுதியானவை..
அதனால்தானே இவனை
மனம் பிறழ்ந்தவன்
எனக்கூறுகிறீர்கள்..
இவன் உள்ளுக்குள்
இறந்து விட்டான்…
எதையும் உணர தேவையற்று
மறுபடியும் வெளி உலகிற்காக
உயிர்வாழ விரும்பவில்லை..
தன்னுள் இறந்தவனாகவே
மனம் பிறழ்தவனாகவே
இவனை வாழ விடுங்கள்..
நியாயங்கள் மடிந்துவிட்ட…
அறம் சார்ந்த வாழ்வே
அருகிவிட்ட …
இவ்வுலகில்
வாழ்வதைவிட
மனம் பிறழ்தவனாக
அவனது உலகில்
இருப்பது எத்தனை சுகம்…
-கோவை.அப்துல் சத்தார்
(2)
As the stone lying in water
I remain…
in silence
lone…
with no obstruction
Despite seeing the course of Time
Daring to be unafraid….
Discarding all the burdens
of day
along the way
all too pleasant….
With no worries at heart
Reclining slowly under the shade of tree
I turn light….
In the atmosphere that
I have created for my own self
I allow my heart to
relax.
Inhaling the air
Soaking in the breeze and
Reveling
Blending with the day’s beauty
I, being myself
Ho , how blissful it is!
நீரில் கிடக்கும்
கல்லினைப்போல்
அமைதியாய் நான்..
தனிமையில்…
எந்த தடையுமின்றி…
காலத்தின் ஓட்டம் கண்டும்
கலங்காமல்…
பகலின் பாரம்
யாவும் துறந்து,
இனிமை ததும்பும்
இனிய வழியில்….
மனதில் ஏதும்
கவலையின்றி
மரநிழலில்
மெல்ல சாய்ந்து
நான் தளர்கிறேன்…
எனக்கென நானே
உருவாக்கிய சூழலில்
இதமாய் இதயம்
இளைப்பாறுகின்றேன்…
மூச்சில் காற்றை முகர்ந்து,
தென்றலில் தோய்ந்து திளைத்து,
நாளின் அழகில் கூடி
நான் நானாக இருப்பது
எத்தனை இனிது…!
-கோவை.அப்துல் சத்தார்
(3)
In those days that echo your name
I slowly walk along the rims of aloneness
and amidst crowds jampacked
As the fading glow of the faraway star above
In the direction where you live
a droplet of my life lingers…
My laughter
in the smile at the corner of your lip
My calm
in those moments of our communion
I have entrusted.
Just as the song that has
forgotten its rhythms
each and every heartbeat of mine
remains incomplete
in tales that never end
and silences with language lost
I search for thee
with a craving beyond words.
When rarely a hairline void
touches thee
Do realize that it is me…
The one who has lost my heart
in thee.
உன் பெயரை எதிரொலிக்கும்
நாட்களில்…
தனிமையின் ஓரங்களிலும்
கூட்ட நெரிசல்களிலும்
மெல்ல நான் நடக்கின்றேன்..
வானின் தொலைதூர
விண்மீனின் மங்கும்
ஒளியைப்போல்..
நீ வாழும் திசையில்
என் உயிரின் ஒரு துளி
தங்கிவிட்டது..
எனது சிரிப்பை
உனது இதழோரப்புன்னகையிலும்..
எனது அமைதியை
நாம் சேர்ந்திருந்த கணங்களிலும்..
நான் தந்துவிட்டேன்…
தன்னுடைய சந்தங்களை
மறந்த பாடலைப்போல்
என்னுடைய ஒவ்வொரு
இதயத்துடிப்பும்
முழுமையற்றதாகவே உள்ளது..
முடிவுறாத கதைகளிலும்
மொழியிழந்த மெளனங்களிலும்
சொற்களில் அடங்கா ஏக்கத்துடன்
உன்னைத்தேடுகிறேன்…
எப்போதேனும்
ஒரு மெல்லிய வெறுமை
உன்னை தீண்டினால்…
உணர்ந்து கொள்..
அது நான்தான்..
உன்னில் எனது இதயத்தை
தொலைத்த..
நான்தான்…!
-கோவை.அப்துல் சத்தார்

















































