INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, March 7, 2024

RENGARAJAN VEERASAMY

 A POEM BY

RENGARAJAN VEERASAMY

(Yuga Yugan)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

In the gentle sway of the lilting train
He was swinging softly
As he was peeling off the Apple skin
with the focus of combing hair
A full moon came and sat there.
Slicing the full Moon
He turned them into crescents.
To the little girl
relishing with her eyes
He extended two of them.
The mother’s eyes
pulling the bridle
The face of the little girl
turned the other side
in refusal
and the Moon’s crescents
grew pale.
Putting inside his mouth
the swelling bitter taste
of love unrequited
he began munching and
swallowing it.
Rengarajan Veerasamy
இரயிலோடும் அலைவில்
மெல்லூஞ்சலாடிக் கொண்டிருந்தார் அவர்.
செல்ல மகளுக்குத்
தலைவாரும் கவனத்தோடு
கையிலிருந்த ஆப்பிளை
சீவிக் கொண்டிருந்தவர்கையில்
முழு நிலவு வந்தமர்ந்தது.
நிலவினைத் வகிர்ந்து
பிறைகளாக்கினார்
கண்களால் புசித்துக்கொண்டிருந்த
எதிர் இருக்கைச் சிறுமியிடம்
இரு பிறைகளை நீட்டினார்
தாயின் கண்கள் சிறுமியின்
கடிவாளங்களை இழுக்கவே.
மறுதலிப்போடு முகம்
திருப்பிக் கொண்ட சிறுமியின் முன்
நிலவின் துண்டுகள் இருளேறின
நிராகரிக்கப் பட்ட அன்பின்
அடங்காக் கசப்பை வாயிலிட்டு
மென்று விழுங்கத் துவங்கினார்
அவர்.
-யுகயுகன்

RIYAS QURANA

 TWO POEMS BY

RIYAS QURANA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. SCHRODINGER’S MUSLIM


Experts were invited to examine
why we didn’t resort to rioting
In front of the Television set we are sitting anxiously
A girl with her face covered with Habaya is shown
Mosques are shown
Our eyes are agitatedly downcast
The experts begin elaborating
Starting as fundamentalists
We soon are branded terrorists
What would be the feeling of being Muslim?
It is facing Life and Death simultaneously.
How is it that whatever religion enters our land
turns into racism
_ we keep wondering
Being in front of the small screen
Corona entering our nation
is drawn towards none but us
who are a mere ten percent
and hugs us
Even our corpses are dangerous they say
We are pondering over the prospect of
munching and swallowing human bodies
when asked to pay even for death
what is the way out for us
The specialists unsatisfied are still
Debating
Bodies to be burnt
We still have with us
Soon we would be saving our skins
Slicing each other and swallowing
It would also satiate our hunger – Yes?
Till the end the experts didn’t elaborate
Why we didn’t retaliate.
Riyas Qurana
SCHRODINGER'S MUSLIM
00000000000000000000
ஏன் கலவரம் செய்யவில்லை என்பதை
ஆராய நிபுணர்கள் அழைக்கப்பட்டனர்
தொலைக்காட்சியின் முன்
பரபரப்போடு அமர்ந்திருக்கிறோம்
முகத்தை மூடிய ஹாபாயா போட்ட
ஒரு பெண் காட்டப்படுகிறார்,
பள்ளிவாயல்கள் காட்டப்படுகின்றன
பதட்டத்தோடு எங்கள் கண்கள்
குனிந்திருக்கின்றன.
நிபுணர்கள் விபரிக்கத் தொடங்குகின்றனர்
அடிப்படை வாதிகள் எனத்தொடங்கி
பயங்கரவாதிகளாகிறோம்
முஸ்லிமாக இருப்பதென்றால்
என்னவென்று உணர்வீர்கள்
வாழ்வையும் சாவையும்
ஒரே நேரத்தில் சந்திப்பதாகும்
அது எப்படி, நாட்டுக்குள் எது நுழைந்தாலும்
இனவாதியாக மதம் மாறிவிடுகிறது என
தொலைக்காட்சித் திரையின் முன்பிருந்து
யோசித்துக்கொண்டிருக்கிறோம்
நாட்டுக்குள் நுழைந்த கொரோனா
காதல்கொண்டு 10 வீதமுள்ள
எங்களைத்தான் கட்டிப்பிடிக்கிறது
எங்கள் இறந்த உடல்களும்
ஆபத்தானவை என்கிறார்கள்
உடல்களைத் தின்று விழுங்குவது பற்றி
ஆலோசனை செய்கிறோம்
மரணத்திற்கும் பணம் செலுத்த வேண்டுமென்று
கோரினால் வேறு வழியென்ன
திருப்தியடையாத நிபுணர்கள்
இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர்
எரிப்பதற்கு தேவையான உடல்கள்
இன்னும் எங்களிடமிருக்கின்றன
விரைவில், எங்கள் உடல்களை
ஒருவர் மாறி ஒருவர் வெட்டித் தின்று
காப்பாற்றிக்கொள்வோம்
எங்கள் பசியையும் அது போக்குமல்லவா
கடைசிவரை அந்த நிபுணர்கள்
நாங்கள் ஏன் கலவரம் செய்யவில்லை என்பதை
விபரிக்கவே இல்லை.
.............................................................................................................................
TRANSLAOTR'S NOTE:
*SCHRODINGER’S MUSLIM
In simple terms, Schrödinger said that if you place a cat and something that could kill the cat (a radioactive atom) in a box and sealed it, you would not know if the cat were dead or alive until you opened the box, so that until the box was opened, the cat was both "dead and alive".
ஷ்ரோடிங்கரின் கருத்தாக்கம், அது எதன் பொருட்டு உருவானது (க்வாண்ட்டம் தியரி), அதில் உள்ள குறைபாடுகள் என்ன, அதன் தாக்கம் என்ன என்று நிறைய விஷயங்கள் / விவரங்கள் அகல்விரிவாகப் பேச இருக்கின்றன. ஆனால், அது இந்தக் கவிதையில் ஒரு குறீயீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் அளவில் அதன் எளிமையான விளக்கம் இதுதான்: ஒரு பூனையையும் பூனையைக் கொல்லக்கூடிய ஒன்றையும் (கதிரியக்க அணு) ஒரு பெட்டியில் வைத்து அடைத்தால், பெட்டி யைத் திறக்கும் வரை பூனை இறந்துவிட்டதா அல்லது உயிருடன் இருக்கிறதா என்று நமக்குத் தெரியாது, அதனால் பெட்டி திறக்கப்படும்வரை பூனை ஒரே சமயத்தில் ’இறந்தும் உயிருடனும் இருந்தது’
…………………………………………………………………………………………………………
**TRANSLATOR'S NOTE (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
பொதுவாக சமகால அரசியலைப் பேசும் கவிதைகளை மொழிபெயர்க்கும்போது நிறைய விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக் கிறது. பரஸ்பரப் புரிதல், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு பதிலாக இன்னுமின்னும் விரோத உணர்வை வளர்க்கும் நோக்கில் எழுதப்பட்டவை, எந்தவொரு மதத்தையும், மத நம்பிக்கையையும் மதிப்பழிப்பதாகப் பேசுபவை முதலிய வற்றைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். மதம் குறித்த, ஒரு குறிப்பிட்ட மதம் குறித்த கவிஞரின் பார்வையும், மொழிபெயர்ப்பாளரின் பார்வையும் மாறுபட்டு இருக்கவும் வாய்ப்புண்டு. அது சார்ந்த முரண் மொழிபெயர்ப்பில் இடம் பெறவும் வாய்ப்புண்டு. மேலும், ஒரு கவிதைக்கான வாசகப்பிரதிகள் ஒன்றுக்கு மேற்பட் டிருக்க வழியுண்டு. கவிஞர் சொல்ல நினைத் ததற்கு எதிர்ப்போக்கில் கவிதை புரிபட, புரியவைக்கப்பட, பொருள்பெயர்க்கப்பட வழியுண்டு.
எந்த மதத்தவராக இருந்தாலும் வெகுமக்கள் பொதுவாக நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறார்கள். அப்படி யில்லை என்று பீதியைக் கிளப்பும், அதற்கான சூழலை உருவாக்கி ஆதாயம் தேடுவோர் எல்லாத் தரப்புகளிலும் இருக்கிறார்கள். இலக்கிய வாதிகள் மத்தியிலும்கூட. பேசிப்பேசிப்பேசியே ஒரு பாதுகாப்பின்மையை மனதள விலும் அதன் வழி சமூகச்சூழலிலும் உருவாக்க அவர வர் மதங்களிலேயே கூட அதிகம் பேர் இருக்கிறார்கள்.
இதனாலெல்லாம் பாதுகாப்பின்மையை உணரும் , தான் விரும்பும் அமைதியை, இணக்கச் சூழலை இழக்க நேரும் அவலத்தை உணரும் சமூகப் பிரக்ஞையுள்ள மனிதரின் குரலாக ஒலிக்கும் இக்கவிதையை மொழிபெயர்க்க வேண்டியது அவசியம் என்று தோன்றியது. என்னால் முடிந்த அளவு சரியாக மொழிபெயர்த்திருக்கிறேன் என்று நம்புகிறேன். சில திருத்தங்கள் தேவைப்படலாம்.






(2)


When I touch you
You turn into jungle
I live in jungle
When you touch me
I become pond
You bathe in pond
Taking the pond with us
We place it in the jungle
Beasts leave the jungle
The pond turns dry
Fish leap on the ground
Writhe and die
In a narrow passage
Entwining our hands
We both travel separately.
En route
None we could meet.

நான் தொடும்போது
நீ வனமாகிறாய்
நான் வனத்தில் வசிக்கிறேன்
நீ தொடும்போது
நான் குளமாகிறேன்
நீ குளத்தில் குளிக்கிறாய்
குளத்தை எடுத்துச் சென்று
வனத்தில் வைக்கிறோம்
வனத்திலிருந்து
விலங்குகள் வெளியேறுகின்றன
குளம் வற்றுகிறது
மீன்கள் தரையில் துள்ளிவிழுந்து
துடித்து இறக்கின்றன
ஒற்றையடிப்பாதை ஒன்றில்
கைகோர்த்தபடி,
தனித்தனியே இருவரும் பயணிக்கிறோம்
வழியில் எவரையும் சந்திக்க முடியவில்லை.
றியாஸ் குரானா

SHAHIBKIRAN THAKKAI

 A POEM BY

SHAHIBKIRAN THAKKAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
PARALLEL UNIVERSE


She blows the soap bubbles
Joy unleashed
Cosmos galore the little girl
creates side by side
God begins to blink
At the corner of a narrow lane
An eternal tortoise
breaks the first ever universe.
In the splinters of god scattered
The angel weeps momentarily
Prema who strokes her tresses
On the balcony upstairs
Laughs in hues and shades.
Only when perceived minutely
It becomes apparent
That the two universes are dissimilar.
In one someone not I
stands under a tree.
Prema laughs.
Shahibkiran Thakkai
இணை பிரபஞ்சம்
சோப்புக் குமிழை ஊதுகிறாள்.
உற்சாகம் கொப்பளிக்கிறது.
எண்ணிலடங்கா பிரபஞ்சங்களை
ஒப்பு வைக்கிறாள் குழந்தை.
கடவுள் இமைக்கத் துவங்குகிறார்.
நெருக்கமான தெருவின் ஓரத்தில்
நித்திய ஆமையொன்று
முதல் பிரபஞ்சத்தை உடைக்கிறது.
தெறிக்கும் கடவுள் துகள்களில்
ஒரு கணம் தன் கண்களைக் கசக்குகிறாள் தேவதை.
பற்பல பிரபஞ்சங்களின்
மாடி மாடத்தில் தலைக் கோதும் பிரேமா
வண்ணங்களில் சிரிக்கிறாள்.
உற்று பார்க்கும்போதுதான் தெரிகிறது
ஒரு பிரபஞ்சம்போல் மற்றொன்றில்லை.
ஒன்றில் நானில்லாத ஒருவன்
மரத்தடியில் நிற்கிறான்.
பிரேமா சிரிக்கிறாள்.
- சாகிப்கிரான்

MOUNA RUMI

 THREE POEMS BY

MOUNA RUMI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

In each stop
She unloads herself
and continues to travel.
Why is she leaving herself there
She knows not.
Also, after leaving herself there
what should be done
remains unknown.
With the hope that her destination
would indeed arrive
She makes herself alight
in each stop.
***
ஒவ்வொரு நிறுத்தத்திலும் அவள்
தன்னை இறக்கி விட்டுவிட்டு
தொடர்ந்து பயணித்தாள்
ஏன் தன்னை இங்கே விடுகிறேன் என
அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை
தன்னை விட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்
எனவும்
அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை
தனக்கான நிறுத்தமும் வந்துவிடும்
என்ற நம்பிக்கையில்
அவள் ஒவ்வொரு நிறுத்தத்திலும்
தன்னை இறக்கி விடுகிறாள்
*** ***

(2)
Late by a minute
She had missed the bus.
Even after that
Buses did arrive.
But She
In one minute
had gone past a Life.

ஒரு நிமிட தாமதத்தால்
தனது பேருந்தை தவறவிட்டிருந்தாள்
அதன் பின்னரும்
பேருந்துகள் வந்தன
ஆனால்
அவளோ
ஒரு நிமிடத்தில்
ஒரு வாழ்வை கடந்துவிட்டாள்.

(3)
Unchanged uncontaminated
not turning rotten nor timeworn
not decreasing in volume, density
never decaying
_ so should retain a Love
How?
If we have wings as fan
Silence as language
Freedom as a cabin
with window
preserving a Love
would be quite easy somehow.
.
மாறாமலும் போகாமலும்
கலக்காமலும்
கெட்டுப்போகாமலும்
காலாவதியாகாமலும் குறையாமலும்
ஒரு நேசத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்
சிறகுகளை விசிறியாகவும்
மவுனத்தை மொழியாகவும்
சுதந்திரத்தை ஒரு சன்னல்
வைத்த அறையாகவும்
கொண்டால்
ஒரு நேசத்தை
தக்கவைத்துக்கொள்வது
மற்றபடி ஒன்றும்
அவ்வளவு கடினமில்லை.




PANDIAN KAZHAARAM DULALINGAN

 TWO POEMS BY

A POEM BY
PANDIAN KAZHAARAM DULALINGAN

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)


The Sunflower that buries in the evening
within itself
the Sun up above
that smears the hot yellow sun
and the silvery cool sun
in quick succession
upon the land by evening
and closes its petals
smashed all too soft and
with Tamarind added
the Lass of the Marutham terrain
applying on her face
to remove the trace of Black
For stalling its melt and Mercurial flow
and arresting it in one focal point
God gets inside meditation and offers
a boon
That which is asked
is for the primordial boon to be given
again
and again.

மஞ்சள் நிறச் சுடும் வெயிலையும்
வெண் நிறக் குளிர் வெயிலையும்
மாற்றி மாற்றி
நிலத்தின் மேல் பூசும்
வான் சூரியனை
மாலையில் தனக்குள் புதைத்து
இதழ்களை மூடும் சூரியகாந்தி
கூழாக அரைந்து
உடன் மஞ்சள் கலந்து
முகக் கருமை போகப் பூசிக் கொள்ளும்
மருத நிலக்காரியை
தினமும்
வெவ்வேறாகக் காட்டும் கண்ணாடி
பாதரசமாய் உருகி ஓடும் மனதை
ஒரு புள்ளியில் குவிக்க
தெய்வம் தியானத்திற்குள் நுழைந்து
ஒரு வரம் தருவதாகக் கூறுகிறது
கேட்கப்படுவதோ
ஆதி முதல் அதே வரம் மீண்டும் வேண்டுமென
- பாண்டியன் கழாரம் துலாலிங்கன்
.......................................................
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
......................................................................
உருவமும் உள்ளடக்கமும் சேர்ந்ததே கவிதை. உருவமும் உள்ளடக்கமும் சேர்ந்தே ஒரு கவிதையை அருமையான கவிதையாக்குகிறது; அப்படியில்லாம லாக்குகிறது.
கவிதையை மொழிவிளையாட்டு என்று சொல்வார்கள்.
கவிதையில் நிறுத்தற்குறிகள் புரிதலை ஓரளவு எளி தாக்குகின்றன. ஒரேயடியாக எளிதாக்குகின்றன என்று சொல்லிவிட முடியாது.
நிறுத்தற்குறிகளற்ற கவிதைகள் புரிதலைக் கடினமாக்கி னாலும், கவிதையின் பல பிரதிகளுக்கான சாத்தியப் பாடுக ளையும் முன்வைக்கின்றன.
மொழிபெயர்ப்பாளர் வாசகராக ஒரு கவிதையை விரும்பித் தேர்ந்து மொழிபெயர்க்க முனையும்போது கவிதையில் இடம்பெறும் நிறுத்தற்குறிகள் அவருடைய பணியை ஓரளவு (ஓரளவே) சுலபமாக்குகின்றன எனலாம்.
அதிலும்கூட, மூலமொழி, இலக்குமொழி இரண்டிற்கு மிடையேயான இலக்கணரீதி யான மொழியியல் கட்டமைப்பு சார் வேறுபாடுகள் சரியான பொருள் பெயர்ப்பிலிருந்தும் மொழிபெயர்ப்பிலிருந்தும் மொழிபெயர்ப்பாளரைத் தள்ளிவைக்கும்.
ஆனல், நிறுத்தற்குறிகளற்ற கவிதை ஒரு வாசகராக ஓரளவு தெளிவாகப் புரிந்தாலும் புரிந்ததை அதேயள வாய் மொழிபெயர்ப்பது மிகக் கடினமான காரியமாகவே இருக்கும்.
சில கவிதைகள் நிறுத்தற்குறிகளற்றிருந்தாலும் படிக்கும்போது நமக்கு அங்கங்கே மறைந்துள்ள முற்றுப் புள்ளி, ஆச்சரியக்குறி, கமா, ஹைஃபென் போன்றவை காணக்கிடைத்துவிடும்!
ஆனால், நிறுத்தற்குறிகளற்ற சில கவிதைகள் உண்மை யாகவே எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்பதே முழுவதும் தெளிவாகாதபடி அடர்பனிமூட்டத்தில் அமைந்திருக்கும்.
கவிஞர் இதை ஆற்றொழுக்காகவும் கட்டமைத்திருக் கலாம். மொழிப்பரி சோதனையா கவும் உருவாக்கியிருக்கலாம்.
இங்கே நான் மொழிபெயர்த்திருக்கும் கவிதை தோழர் பாண்டியன் காழரம் துலா லிங்கன் எழுதியுள்ளது. இந்தக் கவிதையில் சொற்கள் ஒரு நீள்தொடர்ச்சியாக, ஒரு வட்டச்சுழற்சியாகக் கட்டமைந்திருக்கிறது.
ஒருமுறை படிக்கும்போது மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கவிதையைப் பொருள் கொள்ள முடிகிறது.
இன்னொருமுறை படிக்கும்போது கவிதை மொத்தமும் ஒரே நீள் வாக்கியமாக அமைந்தி ருப்பதாய் அதற்கேற்ப பொருள்கொள்ள முடிகிறது.
கிடைத்த அர்த்தக்கூறுகளில் ஒன்றைப் பற்றிக் கொண்டு மொழிபெயர்க்க முயன்றிருக் கிறேன்.
இரண்டு மூன்று முறை திருத்தவேண்டிவரலாம்.

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS