Even after sweeping and cleaning
all lover the skin of the bare patio
sand-particles all over….
The particles of the vast expanse of seashore
where legless bodies wandered
in endless searching
In the radiance of thousand torches aflame
that set fire to the sun
there still glows
the God of Bodhi Tree.
Upon the wings of the
lone bird
flying in angst
there cling still
droplets infinite of the deluge -
as the pain of an eon….
பெருக்கி
ஒதுக்கி கழித்த
பின்னும் நிர்வாண
திண்ணையின்
மேனியெங்கும்
இன்னும்
மணல் துகள்கள் .....
காலற்ற
முண்டங்களால்
உழுது திரிந்த
கடற்கரை பெருவெளியின்
துகள்கள் .....
ஒரு சூரியனை
தகனித்த ஆயிரம்
பந்தங்களின் ஒளியில்
இன்னும் சுடர் விடுகிறது
போதிமரத்து தெய்வம் ....
அந்தரித்து திரியும்
ஒற்றை பறவையின்
இறக்கையில்
இன்னும் ஒட்டியபடி
ஊழிப்பெருமழையின்
தீரா சொட்டுக்கள்
ஒரு யுகத்தின் வலியென....
-லலித்தா-


No comments:
Post a Comment