A POEM BY
PUNITHA JOTHI
He was sitting still
in the same spot….
The sound of some sandal
getting dislodged
He must have heard within….
As the land that submits itself
to all seasons
The footwear-mending worker
waits patiently…..
Between Hope and Hopelessness
swirls as the spinning top
A Hunger…..
இரையை எதிர்நோக்கும்
பல்லியைப்போல்
நகராமல் அவ்விடத்தில்
அமர்ந்திருக்கிறார்...
எங்கோ,ஏதோ ஓர் இடத்தில்
காலணி அறுந்து விழும் ஓசை
அவருக்குள்
கேட்டிருக்கவேண்டும்...
எல்லாப்பருவங்களுக்கும்
தன்னை
ஒப்புக்கொடுக்கும் நிலமாய்
பொறுமையோடு காத்திருக்கிறார்
அந்த செருப்பு தைய்க்கும்
தொழிலாளி...
நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைமிடையில்
பம்பரம் போல்
சுழன்று கொண்டிருக்கிறது
ஒரு பசி...//
~ செ . புனித ஜோதி



No comments:
Post a Comment