INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, June 22, 2026

ATHMAJIV

THREE POEMS BY
ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

Unable to remain stable and peaceful
I go running
Escaping.
Hearing the soft thud of my heart
That wishes utmost to stamp on the shadow of my sorrow
And make it cease to be
My I lies frozen
Inside the tent filled with agonies
Caught in the legs of sorrow intense
that rages on swinging to and fro
between the words that lie broken
I standing in the midst of words
that lie broken
From my eyes that remain there
as a statue made of stone
the stains of tears flowing down
It is that I call poems
having no option
Facing Time
that has made him extend his Hands
to quench his hunger
Eating his queries
a poor poet standing with bowed head
silent as a reticent woman
stamped on his shadow and smashed it.
The Hunger of Time
that made the hand that was writing
elongate for alms
is more malicious
than that of the stomach. Alas.

நிலைகொள்ள முடியாமல்
தப்பி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
விரட்டும் என் துயரின் நிழலை
மிதித்துக் கொல்ல துடிக்கும் இதயத்தின்
மெல்லிய சத்தத்தைக் கேட்டு
உறைந்து போய் கிடக்கிறது
நான்.
வேதனைகள் கவிந்திருக்கும் கூடாரத்திற்குள்
இங்கும் அங்கும் வெறிகொண்டு ஆடும்
மாளாத்துயரின் கால்களில் சிக்கி
உடைந்து கிடக்கும் சொற்களின் நடுவில்
கற்சிலையாய் நிற்கும் என் கண்களில் இருந்து
வழியும் கண்ணீரின் கறைகளைத்தான்
வேறுவழியின்றி கவிதை என்கிறேன்.
வயிற்றுப் பசிக்காய் கையேந்த வைத்த
காலத்தின் முன்
கேள்விகளை தின்றவனாய்
பேசாமடந்தையின் மௌனத்துடன்
தலைகுனிந்து நிற்கும் ஏழைக் கவிஞன்
தன் நிழலை மிதித்து கொன்றான்.
எழுதிக் கொண்டிருந்த கையை
ஏந்த வைத்த காலத்தின் பசி
வயிற்றுப் பசியை விட கொடூரமானது.
ஆத்மாஜீவ்


(2)


He pleads for help
'Please don’t ask us anything hereafter'
So his friends move away
politely and tactfully
He writes the deafening roar
with the body emaciating
as
the Silence of Hunger.
Long long ago
His words were translated you know....
The wind anguished carried along
the fire burning inside the quietude of sorrow.
Along with the words kneeling and
crying out
there drips the painting Time fails to sketch.
The woes of the Poor Poet
proving indescribable
sinks inside the Cave of Hunger.
Judgment should be out
before tonight comes to a close.
A full-stop for Being and Ceasing to Be
keeps wandering to and fro.
In the reverberating sounds of his prayers
God’s ears turn deaf to the core.
The silence of friends who have forsaken him
is but the poem of
sorrows and sufferings infinite.
The eyes of the with hands outstretched
suffering Death
The shame of the spirit wandering within the body
is torn to pieces
He turns upward
his outstretched hands
In between his hands
that shiver in hunger
Praying beseeching there remains
bowing its head
faraway from the unknown world
a poem of his
unwritten.

உதவி கேட்டு கெஞ்சுகிறான் அவன்.
இனிமேல் எதுவும் கேட்காதே என்னிடம் என்று
நாசுக்காக விலகிக் கொள்கிறார்கள்
நண்பர்கள்.
உடல் நலிந்து காதடைக்கும் இரைச்சலை
பசியின் மௌனம் என்று எழுதுகிறான்.
ஒரு காலத்தில் அவனுடைய சொற்கள்
மொழிபெயர்க்கப்பட்டன.
துயரின் அமைதிக்குள் எரிகிற நெருப்பை
வேதனையுடன் எடுத்துச் செல்கிறது காற்று.
மண்டியிட்டு கதறும் சொற்களுடன் வழிகிறது
காலத்தால் வரைய முடியாத ஓவியம்.
ஏழைக் கவிஞனின் சொல்லொணாத் துயரின்
கதறல்கள் பசிக் குகைக்குள் புதைகிறது.
இன்றிரவுக்குள் தீர்ப்பு எழுதப்பட வேண்டும்.
இருப்புக்கும் இறப்புக்கும் ஒரு முற்றுப்புள்ளி
அங்கும் இங்கும் அலைந்தபடி இருக்கிறது.
அவனுடைய பிரார்த்தனைகளின் சப்தங்களில்
செவிடாகிப் போகிறது கடவுளின் காதுகள்.
கைவிட்ட நண்பர்களின் மௌனம்
எழுதித் தீரா வேதனைகளின் கவிதை.
கையேந்துபவனின் கண்கள் செத்து
உடலுக்குள் அலையும் ஆவியின் அவமானம்
நார்நாராய் பிய்த்தெறியப் படுகிறது.
ஏந்திய கைகளை மேல்நோக்கி திருப்புகிறான்.
பசியில் நடுங்கும் கரங்களுக்கு இடையில்
கெஞ்சியபடி தலைகுனிந்து கிடக்கிறது
அறியப்படாத உலகத்திற்கு வெகுதொலைவில்
அவனுடைய எழுதப்படாத ஒரு கவிதை.
ஆத்மாஜீவ் (காலக்ரமம் ஆத்மாஜீவ்)

(3)



My Most Esteemed Friends” –
“Please don’t shed tears
for not coming to my aid
at the hour of utmost need’
_Indicating so
with eyes bulging
mouth wide-opened
yet speaking nothing
He who lay there on his back
had in his hand all coiled
Time’s Rope.

"காப்பாற்ற வேண்டிய சமயத்தில்
காப்பாற்றத் தவறினோமே என்று
கண்ணீர் விட்டு கலங்காதீர்கள் என்
நண்பர்களே"
என்ற குறிப்புடன் விழிபிதுங்க
வாய்திறந்திருந்தும் பேசாமல்
மல்லாந்து கிடந்தவனின் கையில்
சுருண்டு கிடந்தது
காலத்தின் கயிறு.
ஆத்மாஜீவ் :

:

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

APRIL, MAY, JUNE 2026 - INSIGHT