A POEM BY
NESAMITRAN
to the full
With my love having stunted growth
did I touch thee
Your love as a shirt loaned
is the mercy meant for a special day
It is those small joys given amidst
sorrows intense
that keep us away from treating God
with hate absolute.
It is like a She who has not the heart
to do away with the plant
that flowers not, offers no fruit
allowing it to remain for the shade it offers
I am still there in your world
As the sugar given at the time of birth
As the salt offered at the time of burial
The colour of my Love remains the same
ever
The regret that I should have loved thee
still more fittingly
ails me always
Is there a day when the sun
has touched in all
the ocean whole?!
நேச மித்ரன்
உண்மையில் என்னால்
உன் பாத்திரத்தை முழுதும் நிரப்ப
முடியவில்லை
என் அன்பின் வளராத பாகத்தால்
உன்னைத் தீண்டினேன்
இரவல் கொடுக்கப்பட்ட
சட்டையை போன்ற உன் அன்பு
ஒரு விசேஷ நாளுக்கான
கருணை
பெரிய துன்பங்களுக்கு
நடுவே வழங்கப்படும்
சிறிய மகிழ்ச்சிகள்தான்
கடவுளை முற்றும் வெறுக்காமல்
வைத்திருக்கின்றன
சரியாய் காய்க்காத தாவரத்தை
நிழலுக்கென விட்டு வைத்திருக்கும்
வெட்டப் பிரியமில்லாத ஒருத்தியைப் போல்தான்
உன்னுலகில் நான் மிச்சமிருக்கிறேன்
பிறந்ததும் தரும்
சக்கரையைப் போல
புதைக்கும் போது இடும்
உப்பைப் போல
என் அன்பு ஒரே நிறத்தில்தான் இருக்கிறது
எப்போதும்
உன்னை
இன்னும் சரியாய் காதலித்திருக்க
வேண்டும் நான்
என்ற குறை எப்போதும் உண்டு
சூரியன் பரிபூரணமாய் கடலைத் தொட்ட நாளுண்டா என்ன ?!


No comments:
Post a Comment