INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, October 6, 2021

KAJURI PUVIRASHA

 A POEM BY

KAJURI PUVIRASHA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The pollen –grains in millions stuck on the butterflies

swaying in the branch this way and that way
soaked in henna-red
defying the intense penance of the algae
the immaculate White of the ‘Valampuri Sangu’
lying deep down
is your laughter
The eyes turned red in silence upside down
The soft lips would hold tight
with the care of peacock plume
In a lone soft moan
many an overalls and en blocs
The venom of serpent
turning the nerves taut
soaked and surging frog-life
the raging heat
So
the river-kisses clasping the pebbles
brim and swell
becoming the fish in the blue-heron’s beak
Kajuri Puvirasha
இடதும் வலதுமாய்
கிளையில் அசையும் பட்டாம்பூச்சிகளில்
ஒட்டிக்கிடக்கும் மகரந்த துகள்
ஆயிரங்கோடி மருதானிச்சிவப்பில் ஊறி
நீர்ப்பாசிகளின் கடுந்தவத்தை மீறி
ஆழத்தில் கிடக்கும் வலம்புரிச் சங்கின்
வெண்மை உனது சிரிப்பு
தலைகீழ் மௌனத்தில் சிவந்த விழிகளை
மயிற்பீலி வாஞ்சையோடு தழுவும்
மென்இதழ்கள்
ஒரு சினுங்கலில் தொலையும் ஒட்டுமொத்தங்கள்
நரம்பிறுக்கும் நாகவிஷம்
தவளையின் உயிரூறிய
கடுந் தகிப்பு
ஆக
கூழாங்கற்களை தழுவும் நதி முத்தங்கள்
நீலநாரையின் அலகில் மீனாகி
ததும்புகின்றது



Sri N Srivatsa, Kajuri Puvirasha and 33 others
4 Comments
1 Share
Like
Comment
Share

PRAMILA PRADEEPAN

A POEM BY
PRAMILA PRADEEPAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
That the night has two wide eyes I have seen. And have turned terror-stricken.
After looking at the eyes for a long time and getting accustomed to them the spread of a dot of shine seeping through some tiny hole somewhere has shown me the cornea too of those two eyes.
The night-time elongating vision of those eyes in my house alone or throughout the passage of the overall space of the Globe
I am at a loss to ascertain. But the eyes that gaze at me fixedly on all nights probing me, I do see quiet straight
so the passing days have begun their mission of imparting in me this realization that instead of growing apprehensive about those eyes that pierce through me day-in and day-out and pushing them aside
it is only through initiating a mutual kinship with them
I can wade through Nights _
Pramila Pradeepan

இரவிற்கு இருபெரும் விழிகள் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். கண்டு பயந்துமிருக்கிறேன். நீண்ட நேரமாய் அக்கண்களையே பார்த்து பரிச்சயப்பட்டபின் எங்கோ சிறு துவாரத்தினூடு கசிந்து பரவும் ஒரு புள்ளி ஒளியின் பரவுகை அக்கண்களின் விழிவெண்படலத்தையும் எனக்கு காட்டிக்கொடுத்திருக்கிறது.
அவ்விழிகளின் இராக்கால பார்வைநீட்சி என் வீட்டில் மட்டுந்தானா இல்லை உலகின் ஒட்டுமொத்த இடங்களின் வழியிலுமாவென்பதை நானறியேன். ஆனால் எப்போதுமாய் இரவு பொழுதுகளில் சிமிட்டாது என்னை அவதானிக்கும் அவ்விழிகளை நான் நேருக்கு நேர் சந்திக்கிறேன்.
சதா என்னை உற்றுநோக்கும் அக்கண்களை தள்ளிவைத்து மிரளுவதை விட அதனுடன் பரஸ்பர ஸ்னேகத்தை ஏற்படுத்துவதனூடாக மாத்திரமே என்னால் இரவு பொழுதுகளை கடக்கவியலும் என்பதையும் நாட்களின் நகர்தல்கள் எனக்கு உணர்த்த தொடங்கியிருக்கின்றன.

 

YAVANIKA SRIRAM

 A POEM BY

YAVANIKA SRIRAM


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Too bad I remained totally unaware; extremely sorry.
(Pause; build up)
Somehow the cuffs had clasped round the legs
The travelers return home
Vagabonds blabber
He who postponed time
would turn the Place into a memory-lapse
Dreams never have the prospect of coming true
Moreover it has no beginning nor end.
When I come to know of startling news
I stand lost and blinking.
Can entrust just this much _
to the fruit left on earth by the tree
to be as suits its whims and fancies
to the waves to roar ever and again
for going without word equivalent
Further the wearisome kinship with the too long a role
being played by god in the chain of life – that also.
Searching for those who declare their love for us
becomes
an all-time struggle.
Sea is but a pond filled with rain water
It is not some kind of riot like taking water for our field
from a pool
The scale sufficient to scorn Birth .
Siddhartha is escaping; fleeing.
Silly Fool.
Yavanika Sriram
அறியாமல் இருந்துவிட்டேன் மன்னிக்கவும்
(பீடிகை)
கால்களை எப்படியோ விலங்குகள் பூட்டிக்கொண்டு விட்டன
பயணிகள் இல்லம் திரும்பி விடுகிறார்கள்
நாடோடிகள் பிதற்றுகிறார்கள்
காலத்தை ஒத்தி வைத்தவர்
இடத்தை ஞாபகப்பிசகாக்குவார்
கனவுகளுக்கு எக்காலத்திலும் நடைமுறைச்சாத்தியமில்லை
மற்றும் அதற்கு ஆதியும் அந்தமும் இல்லை
.
திடுக்கிட்டுப்போகும்படியான செய்திகளை அறியும் போது அலங்கமலங்க விழிக்கிறேன்
இவ்வளவிற்குத்தான் ஒப்புக்கொடுக்க முடியும்
தோன்றியதைச் செய்யும்படிக்கு
ஒரு மரம் பூமியில் கைவிடும் கனிக்கு
அந்த அலைகள் திரும்பத்திரும்பஆர்ப்பரிப்பதற்கு
அதற்கு இணையான சொல்லற்றும் போவதற்கு
மேலும் உயிர்ப்பின்னலில் கடவுளின் நீண்டகாலப் பங்கின் மீது சோம்பலுறவும்தான்
நேசிக்கிறேன் என்பவர்களைத் தேடுவது ஒருவருக்கு
வாழ்நாள்ப்பிரயத்தனமாகிவிடுகிறது
கடல் என்பது மழைநீரால் நிரம்பிய ஒரு குட்டை
ஒரு குட்டையில் இருந்து நம் வயலுக்கு நீர் எடுப்பது போன்ற கலவரம் அல்ல அது
பிறவியை உதாசீனப்படுத்த போதுமான அளவுகோல்
தப்பிப் போய்க்கொண்டிருக்கிறான் சித்தார்த்தன்
முட்டாள்.

-------------------------------------------------------------------------------

மொழிபெயர்ப்பின் விசித்திரத்தன்மை

 கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் கவிதையொன்றை என்னால் முடிந்த அளவு மொழிபெயர்த்துப் பதிவேற்றியுள்ளேன். இன்னும் திருத்தங்கள் தேவைப்படும். அது குறித்து கமெண்ட் பகுதியில் எங்களுக்கிடையே நடந்த நட்பு ரீதியான உரையாடல் இது: லதா ராமகிருஷ்ணன்

Yavanika Sriram :Anaamikaa Rishi கவிதைக்கும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பிற்கும் அம்மொழி பெயர்ப்பை மீண்டும் தமிழில் கன்வர்ட் செய்யும்போது உண்டாகும் விசித்திரதன்மைக் கும் இடையே (அது வேறு என்னவோ செய்கிறது) மூன்று காலங்கள் உண்டாகிவிடுவது போல் இருக்கிறது. பிடித்தும் இருக்கிறது. அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று அறிய ஆவல்.

Anaamikaa Rishi : மூல கவிதைக்கு மிக நெருக்கமான மொழி பெயர்ப்புக்கு மிக முக்கியத் தேவை ஒரு தெளிவான வாசகப் பிரதி கிடைத்தல். ஒரு வாசகராக உங்கள் கவிதையில் அது எனக்குக் கிடைத்ததாகச் சொல்லவியலாது. என் போதாமையே இதற்குக் காரணம்.

அதற்காக முற்றும் புரியக் கூடிய நேரிடையான கவிதை களைத்தான் மொழி பெயர்ப்பது என்ற நிலைப்பாடு சரியல்ல. சில வார்த்தைகளின் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் கவிதையில் பொருந்தி வருவதாகத் தோன்றும் போது மொழிபெயர்ப்பதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. (உதார ணம்: பீடிகை)

நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள், எதைப் பற்றி எழுதினீர்கள், இந்த வார்த்தையை எந்த அர்த்தத் தில் பயன்படுத்தினீர்கள் என்றெல் லாம் கவிஞரிடம் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டு மொழி பெயர்த்தால் மொழி பெயர்ப்பு இன்னும் நேர்த்தியாக அமையக் கூடும். ஆனால்,அது கவிஞரிடம் நிகழ்த்தப்படும் அத்துமீறலாகி விடக்கூடுமோ என்ற தயக்கமும், ஒரு கவிதைக்கு எழுத்தாளர் பிரதி ஒன்றும் (ஒன்று தான் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா) ஒன்றுக்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளும் உண்டுஎன்ற நவீன தமிழ்க்கவிதைப் போக்கில் பெற்ற பார்வையின் காரணமாக கவிஞரிடம் அர்த்தத்தைக் கேட்பதில் உள்ள ஒவ்வாமையுணர்வும் சேர்ந்து எனக்குக் கிடைக்கும் அர்த்தத்தில் மொழிபெயர்க்கிறேன்.

பல சமயங்களில் பூடகக் கவிதை பகுதியளவே அர்த்த மாகி ஆனாலும் அதில் உணரக்கிடைக்கும் ஒரு ஆழம் அதை மொழிபெயர்க்கத் தூண்டு கிறது. மேலும் மூலமொழிக்கும் இலக்குமொழிக்கும் உள்ள தனித்து வமான வாக்கிய அமைப்புகளும் விரிபொருள்களும்கூட மூல கவிதை யின் மொழிபெயர்ப்பில் நெருட லாக அமையலாம்.

நீங்கள் விரும்பினால் உங்களுடைய இந்தக் கவிதையில் நீங்கள் சொல் லியிருப்பதை சொல்ல முற்படுவதை குறிப்புணர்த்தலாக கமெண்ட் பகுதியிலோ உள்பெட்டியிலோ தெரிவிக்கலாம். அதன் மூலம் என் மொழி பெயர்ப்பின் முதல் வரைவில் செய்யும் திருத்தங்களையும் இங்கே வெளியிடலாம்.

எப்படியுமே, மூலமொழிப் பிரதியை இலக்குமொழியில் பெயர்த்த பின் அதை மீண்டும் மூலமொழியில் செய்தால் அது ஒருவித விசித்திரத் தன்மையோடுதான் இருக்கும். இது உரைநடைக்கும் பொருந்தும்! ஆனா லும், இந்த வாதத்தை சரியில்லாத மொழிபெயர்ப் புக்கு சாதகமாக்கி விடலாகாது!

லதா ராமகிருஷ்ணன்.


INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS