FOUR POEMS BY
VASANTHADHEEPAN
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
He is not one enchanted by the hues and shades of
Butterflies
He never wanders in search of the radiance of stars
He doesn’t shed tears for leaves falling
He never sits in penance for the flowers to bloom
He is not one inhaling the scent of gunpowder
He is not one who enjoys the child’s teary cry
as music supreme.
He is not one who devours women’s flesh
as the rogue cat.
He is not one who fills gloom in books
He is one who thinks not of making anyone
wear yokes as ornaments.
He feeds not anyone with the venom of caste.
He carries not the burden of religious fanaticism
in heart and brain.
He loves his Mother Tongue
but never shuns other languages
He never makes other race the manure
for nurturing his own, sure.
He doesn’t mix the imagination of god
in society’s blood.
In water land and wind
which are the very life of Nature
He would never fill the greed of selfishness.
For making man to live a man
joining hands with the collective society
sowing humaneness as the very essence
of the future generations
For making life an enchanting flower garden
He wouldn’t hesitate to sacrifice himself. Amen.
சக மனிதனுக்காக துக்கிப்பவன்
________________________________________
பட்டாம்பூச்சிகளின் வர்ணங்களில்
லயித்துக் கிடப்பவனல்ல
நட்சத்திரங்களின் ஒளியைத்
தேடித் திரிபவனல்ல
இலைகள் உதிர்வதற்காக
கண்ணீர் சிந்துபவனல்ல
பூக்களின் மலர்தலுக்காக தவம்
கிடப்பவனல்ல
வெடிமருந்து வாசனையை
நுகர்ந்து களிப்பவனல்ல
குழந்தைகளின் அழுகையை
சங்கீதமென்று ரசிப்பவனல்ல
பெண்களின் சதையை
திருட்டுப் பூனையாய் தின்பவனல்ல
புத்தகங்களில் இருளை
நிரப்புவனல்ல
நுகத்தடிகளை ஆபரணங்களென
எவர் மீதும் பூட்ட நினையாதவன்
சாதி நஞ்சை எவருக்கு புகட்டாதவன்
மதவெறியை இருதயத்திலும் மூளையிலும் சுமக்காதவன்
தாய்மொழியை நேசிப்பான் மற்ற மொழிகளைத் தூஷிப்பவனல்ல
தன் இனம் செழிப்பதற்காக
அயல் இனத்தை உரமாக்குபவனல்ல
கடவுள் கற்பனையை சமூகத்தின் குருதியில் கலக்கமாட்டான்
இயற்கையின் உயிரான நீர் நிலம் காற்றில்
சுயநலத்தின் பேராசையை நிரப்பமாட்டான்
மனிதனை மனிதனாக வாழ
திரள் சமூகத்தோடு கரங்கள் கோர்த்து
மனிதத்தை எதிர்கால சந்ததிக்காக
விதைத்தே
வாழ்வை எழிலார்ந்த பூவனமாக்க
தன்னையே பலியிட தயங்காதவன்.
வசந்ததீபன்
2. ALONENESS AND ITS TRAVEL NOTES

(1)
In order to lose the shadow
I went to the desert
On the sandy space there seated
The images of plants thousand.
With a look of accusation
They glared at me.
I set out to dig the fountain
For turning them peaceful.
My shadow was destroyed
devouring the body.
2)
Hundred faces for god
Thousand for man
Life that wanders formless
indefinite
Just as
by burying its head in the sand
the ostrich can save its skin
and so climbing the bubble
going on a long voyage
so a lifetime for all
with greed myriad
unquenched.
(3)
No language exists
To spell out that which nags the heart
Which words to perform
the bonding-breaking ritual?
How to express?
In the minutes dropping
one by one
bearing untold burden
And push forward the days
In such a voyage sans notes
When… What
Can be determined?
The Beginning and End
Darkness or Radiance?
In this
Rolling in dreams
Going beyond Time and Space
With the sky flowering
The earth too feeling ecstatic
As a tiny particle in the universe
the world remains.
தனிமையின் பயணக் குறிப்புகள்
____________________________________________
(1)
நிழலைத் தொலைக்கப்
பாலைவனத்திற்குப் போனேன்
மணல் வெளியில் வீற்றிருந்தன
ஆயிரம் தாவரங்களின் பிம்பங்கள்
பழிப் பார்வையோடு
கோபமாய் முறைத்தன
நீர் ஊற்றைத் தோண்ட முனைந்தேன்
அவற்றைச் சாந்தம் கொள்ள வைக்க
நிழல் அழிந்து போனது
என் உடலைத் தின்றுவிட்டு.
2
கடவுளுக்கு நூறு உருவங்கள்
மனிதனுக்கு ஆயிரம் முகங்கள்
அரூபமாய் திரிகிற
அறுதியிடாத வாழ்க்கை
நெருப்புக்கோழி தன் தலையை
மண்ணில் புதைத்து விட்டால்
உயிர் தப்பி விடலாம் என்பதாய்
நீர்க் குமிழியேறி
நீள் பயணம் செல்லும்
பிறவிக் காலம் யாவர்க்கும்
தீராத பேராசைகளுடன்
(3)
நெஞ்சுக்குள் புழுங்குவதை
வார்த்தைகளாக்க ஏது மொழி ?
தொடுப்பு முடிப்பு எனும் சடங்கு நிகழ்த்த
எந்தச் சொற்கள்?
எங்ஙனம் வெளிபடுத்த?
உதிரும் நிமிஷங்களில்
அல்லலேற்று
நாட்களை நகர்த்தியே போகும்
குறிப்பற்ற பயணத்தில்
என்று..எதை..அறுதியிட ஏலும் ?
ஆதியும் அந்தமும் இருளா? ஒளியா?
இதில் கனவுகளில் புரண்டு புரண்டு
காலம் , வெளி கடந்து
வானம் பூத்திருக்க
பூமியும் புளகாங்கிதம் கொள்ள
பிரபஞ்சத்தில்
சிறு துகளாய் உலகம்.






























