A POEM BY
ABDUL SATHAR
Now and then sorrow comes and
knock at the window.
Even if I don’t open
blending with the wind
it enters inside!
Shedding tears
is not my weakness
It is rain
stagnated deep down
It is river
swelling; overflowing.
Inside me
memories as old photographs
remain faded
When I feel them
pain shoots at the fingers.
Sorrow is similar to night.
Even in the dark ,
Stars spark.
Though sorrow unsettles me
to the core
Through consoling, counselling my own self
I come out of it
stronger than before
·
எனது மனம்
ஒரு மூடிய அறை…
அவ்வப்போது சோகம் வந்து
சன்னலை தட்டுகிறது.
திறக்கவில்லை எனினும்
காற்றோடு கலந்து
உள்ளே நுழைகிறது…!
அழுகை என்பது
எனது பலவீனம் அல்ல..
மனதின் ஆழத்தில்
தேங்கி நிற்கும் மழை
வழிந்து ஓடும் நதி…!
என்னுள் நினைவுகள்
பழைய நிழற்படங்கள் போல்
பொலிவிழந்துள்ளன..
தொட்டுப் பார்க்கையிலே
விரல்களில் வலி
ஒட்டிக்கொள்கிறது…!
துயரம்
இரவு போன்றது…
இரவின் இருளிலும்
விண்மீன்கள்
ஒளிர்கின்றன..!
சோகம் என்னை
நிலைகுலைத்தாலும்
என்னை நானே
ஆற்றுப்படுத்தி
மீண்டெழுகிறேன்…!
-கோவை.அப்துல் சத்தார்



No comments:
Post a Comment